அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2621

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّ عَمَّهَا مِنْ الرَّضَاعَةِ يُسَمَّى ‏ ‏أَفْلَحَ ‏ ‏اسْتَأْذَنَ عَلَيْهَا فَحَجَبَتْهُ فَأَخْبَرَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهَا ‏ ‏لَا تَحْتَجِبِي مِنْهُ فَإِنَّهُ يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ

ஆயிஷா (ரலி) என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு (அனுமதி அளிக்காமல்) திரையிட்டுக்கொண்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ அவரிடம் திரையிட்டு(மறைத்து)க்கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்த உறவால் மணமுடிக்கத் தகாத உறவுகளெல்லாம் பால்குடியாலும் மணமுடிக்கத் தகாத உறவுகளாகிவிடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2620

‏و حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ قَالَتْ : ‏

‏اسْتَأْذَنَ عَلَيَّ عَمِّي مِنْ الرَّضَاعَةِ ‏ ‏أَبُو الْجَعْدِ ‏ ‏فَرَدَدْتُهُ قَالَ لِي ‏ ‏هِشَامٌ ‏ ‏إِنَّمَا هُوَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏فَلَمَّا جَاءَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرْتُهُ بِذَلِكَ قَالَ ‏ ‏فَهَلَّا أَذِنْتِ لَهُ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَمِينُكِ ‏ ‏أَوْ يَدُكِ

ஆயிஷா (ரலி) என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அபுல் ஜஅத் (ரலி) வந்து என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) வந்ததும் நடந்ததைத் தெரிவித்தேன்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல், “உனது கை / வலக் கை, மண்ணைக் கவ்வட்டும்! நீ அவருக்கு அனுமதியளித்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா (ரஹ்)


குறிப்பு :

அவர் (ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தையின் சகோதரர்) அபுல் குஐஸ் ஆவார்” என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) கூறினார்கள்.

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2619

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏جَاءَ عَمِّي مِنْ الرَّضَاعَةِ يَسْتَأْذِنُ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى ‏ ‏أَسْتَأْمِرَ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ إِنَّ عَمِّي مِنْ الرَّضَاعَةِ اسْتَأْذَنَ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْيَلِجْ ‏ ‏عَلَيْكِ عَمُّكِ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ إِنَّهُ عَمُّكِ ‏ ‏فَلْيَلِجْ ‏ ‏عَلَيْكِ ‏


و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ أَخَا ‏ ‏أَبِي الْقُعَيْسِ ‏ ‏اسْتَأْذَنَ عَلَيْهَا فَذَكَرَ ‏ ‏نَحْوَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ اسْتَأْذَنَ عَلَيْهَا ‏ ‏أَبُو الْقُعَيْسِ

என் பால்குடித் தந்தையின் சகோதரர் (அஃப்லஹ்) என் வீட்டிற்கு வந்து, வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவு பெறாமல் அனுமதியளிக்க முடியாது” என்று மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நான், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் உன் வீட்டிற்குள் வரலாம்” என்று கூறினார்கள். அப்போது நான், “(அவருடைய) மனைவி தான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லையே?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மீண்டும்) என்னிடம், “அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார். எனவே, அவர் உன் வீட்டிற்குள் வரலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

ஹம்மாதிப்னு ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபுல் குஐஸின் சகோதரர், ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார் …” என ஆரம்பமாகிறது.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் பால்குடித் தந்தை) அபுல் குஐஸ் (ரலி) அனுமதி கேட்டார்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2618

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّهُ جَاءَ ‏ ‏أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ ‏ ‏يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ وَكَانَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏أَبَا ‏ ‏عَائِشَةَ ‏ ‏مِنْ الرَّضَاعَةِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ وَاللَّهِ لَا آذَنُ ‏ ‏لِأَفْلَحَ ‏ ‏حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ ‏ ‏أَبَا الْقُعَيْسِ ‏ ‏لَيْسَ هُوَ أَرْضَعَنِي وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ ‏ ‏جَاءَنِي يَسْتَأْذِنُ عَلَيَّ فَكَرِهْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ قَالَتْ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ائْذَنِي لَهُ


قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَبِذَلِكَ كَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَقُولُ ‏ ‏حَرِّمُوا مِنْ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنْ النَّسَبِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ جَاءَ ‏ ‏أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ ‏ ‏يَسْتَأْذِنُ عَلَيْهَا ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ وَفِيهِ فَإِنَّهُ عَمُّكِ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَمِينُكِ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏زَوْجَ الْمَرْأَةِ الَّتِي أَرْضَعَتْ ‏ ‏عَائِشَةَ

அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்கு வந்து, உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல் குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்” என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்), “அவருக்கு நீ அனுமதியளிக்கலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

“அபுல் குஐஸ், ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார்.

ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது.
இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி), “இரத்த உறவால் மணமுடிக்கத் தகாத உறவுகளாக நீங்கள் ஆக்குகின்ற உறவுகளை, பால்குடி உறவின் மூலமும் மணமுடிக்கத் தகாத உறவுகளாக ஆக்கிவிடுங்கள்” என்று கூறுவார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான உர்வா (ரஹ்) கூறுகின்றார்.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும். அவர் (அஃப்லஹ்) உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “அபுல் குஐஸ், ஆயிஷா (ரலி) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயின் கணவர் ஆவார்” என்றும் காணப்படுகிறது.

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2617

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّ ‏ ‏أَفْلَحَ ‏ ‏أَخَا ‏ ‏أَبِي الْقُعَيْسِ ‏ ‏جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا وَهُوَ عَمُّهَا مِنْ الرَّضَاعَةِ بَعْدَ أَنْ أُنْزِلَ الْحِجَابُ قَالَتْ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرْتُهُ بِالَّذِي صَنَعْتُ ‏ ‏فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ عَلَيَّ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏أَتَانِي عَمِّي مِنْ الرَّضَاعَةِ ‏ ‏أَفْلَحُ بْنُ أَبِي قُعَيْسٍ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَزَادَ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَدَاكِ أَوْ يَمِينُكِ

அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்கு வந்து உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது, நான் அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூகுஐஸின் புதல்வர் அஃப்லஹ் (ரலி) என்னிடம் வந்தார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார் …” என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயிஷா (ரலி) (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “(அவருடைய) மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லை. (எனவே அஃப்லஹ் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன்)” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் இரு கைகளும் அல்லது உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்(*)” என்று கூறினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

(*) “உன் கை / மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” எனபதெல்லாம் நேரடிப் பொருள் தராத, பிறரைக் கண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அரபு இலக்கியச் சொற்கள்.

அத்தியாயம்: 17, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2616

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو مَعْمَرٍ إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ الْوِلَادَةِ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “பிறப்பால் ஏற்பட்ட உறவால் மணமுடிக்கக் கூடாதவர்களை, பால்குடி உறவாலும் மணமுடிக்கக் கூடாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2615

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهَا : ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ عِنْدَهَا وَإِنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ ‏ ‏حَفْصَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُرَاهُ فُلَانًا لِعَمِّ ‏ ‏حَفْصَةَ ‏ ‏مِنْ الرَّضَاعَةِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ لَوْ كَانَ فُلَانٌ حَيًّا لِعَمِّهَا مِنْ الرَّضَاعَةِ دَخَلَ عَلَيَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلَادَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் இருந்த ஒரு நாளில், ஹஃப்ஸா (ரலி) வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். எனவே நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (மனைவி ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல யாரோ ஒருவர் அனுமதி கேட்கின்றார்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் இன்னவராக இருப்பார் என நான் கருதுகின்றேன்” என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சொன்னார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இன்னவர் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!” என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம் (முடியும்); பிறப்பு, மணமுடிக்கத் தடை செய்யும் உறவுகளை, பால்குடியும் தடை செய்யும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2614

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمَقْبُرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَيَّاشُ بْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ : ‏

‏أَخْبَرَ وَالِدَهُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنِّي ‏ ‏أَعْزِلُ ‏ ‏عَنْ امْرَأَتِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَ تَفْعَلُ ذَلِكَ فَقَالَ الرَّجُلُ أُشْفِقُ عَلَى وَلَدِهَا أَوْ عَلَى أَوْلَادِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ كَانَ ذَلِكَ ضَارًّا ضَرَّ ‏ ‏فَارِسَ ‏ ‏وَالرُّومَ ‏


و قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فِي رِوَايَتِهِ إِنْ كَانَ لِذَلِكَ فَلَا مَا ضَارَ ذَلِكَ ‏ ‏فَارِسَ ‏ ‏وَلَا ‏ ‏الرُّومَ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் என் மனைவியுடன் (உறவு கொள்ளும்போது) அஸ்லுச் செய்கின்றேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஏன் செய்கின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அவளுடைய (மற்ற) குழந்தை / குழந்தைகள் மீது பரிவுகாட்டு(வதற்காகவே அவ்வாறு செய்)கின்றேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது (மற்ற) குழந்தை/களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாயிருந்தால், பாரசீகர்க(ளின் குழந்தை)களுக்கும் ரோமர்க(ளின் குழந்தை)களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “இக்காரணத்திற்காகவே நீ அவ்வாறு செய்கிறாய் எனில், (இனி) வேண்டாம். (ஏனெனில்) அது பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை!” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

இத்துடன் அத்தியாயம் 16 நிறைவடைந்தது, அல்ஹம்து லில்லாஹ்!

அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2613

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْمُقْرِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ أُخْتِ عُكَّاشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏حَضَرْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنْ ‏ ‏الْغِيلَةِ ‏ ‏فَنَظَرْتُ فِي ‏ ‏الرُّومِ ‏ ‏وَفَارِسَ ‏ ‏فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَأَلُوهُ عَنْ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ الْوَأْدُ الْخَفِيُّ ‏


زَادَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فِي حَدِيثِهِ عَنْ الْمُقْرِئِ وَهِيَ  ” ‏وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ “  ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الْقُرَشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ ‏ ‏فِي ‏ ‏الْعَزْلِ ‏ ‏وَالْغِيلَةِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏الْغِيَالِ

நான் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றேன். அப்போது அவர்கள், “பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டாமென நான் தடை விதிக்க எண்ணினேன். பிறகு ரோமர்களும் பாரசீகர்களும் தம் குழந்தைகள், (தாய்ப்) பால் அருந்திக்கொண்டிருக்கும்போதே அவர்கள் தம் மனைவியருடன் உறவு கொண்டும் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் நேராமலிருப்பது குறித்து யோசித்துப் பார்த்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்)” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களிடம் அஸ்லுச் செய்வதைப் பற்றி வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது மறைமுகமான சிசுக் கொலையாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உக்காஷா (ரலி) அவர்களின் சகோதரி ஜுதாமா பின்த்து வஹ்பு (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ (ரஹ்) வழியாக உபைதுல்லாஹ் பின் ஸயீத் (ரஹ்) அறிவிப்பதில், “உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, என்ன பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள்? என விசாரிக்கப்படும்போது …” எனும் (81:8,9 ஆவது) வசனங்களில் கூறப்பட்டுள்ள சிசுக் கொலைக்கு, அஸ்லு ஒத்திருக்கிறது என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2612

‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ : ‏

‏أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنْ ‏ ‏الْغِيلَةِ ‏ ‏حَتَّى ذَكَرْتُ أَنَّ ‏ ‏الرُّومَ ‏ ‏وَفَارِسَ ‏ ‏يَصْنَعُونَ ذَلِكَ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَأَمَّا ‏ ‏خَلَفٌ ‏ ‏فَقَالَ عَنْ ‏ ‏جُذَامَةَ الْأَسَدِيَّةِ ‏ ‏وَالصَّحِيحُ مَا قَالَهُ ‏ ‏يَحْيَى ‏ ‏بِالدَّالِ

“பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டாமெனத் தடை விதிக்கலாமா என எண்ணினேன். ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நினைத்துப் பார்த்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுதாமா பின்த்து வஹ்பு அல் அஸதிய்யா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் மூல அறிவிப்பாளரான நபித் தோழி ‏جُدَامَةَ (ரலி) அவர்களின் பெயரை இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கலஃப் (ரஹ்),جُذَامَةَ  என்று பிழையாகக் குறிப்பிடுகின்றார். இதன் வேறோர் அறிவிப்பாளரான யஹ்யா (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி அவரது பெயர் جُدَامَةَ என்பதே சரியானதாகும்“ என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்கள்.