அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 508

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلَا تَقْضِي الصَّلَاةَ فَقَالَتْ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قُلْتُ لَسْتُ ‏ ‏بِحَرُورِيَّةٍ وَلَكِنِّي أَسْأَلُ قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக்கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா?” என்று கேட்டார்கள். “நான் ‘ஹரூரா’க்காரி அல்லள். ஆயினும், (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கின்றேன்” என்றேன். அப்போது ஆயிஷா (ரலி), “எங்களுக்கும் (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளை இடப்பட்டோம்; விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் கட்டளை இடப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 507

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاذَةَ ‏:‏

‏أَنَّهَا سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ ‏قَالَ ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏تَعْنِي يَقْضِينَ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண், விடுபட்ட தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலத்தில் (விடுபட்ட தொழுகைகளை) மீட்குமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டளை இடவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 506

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ الرِّشْكِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ :‏

‏ ‏أَنَّ ‏‏امْرَأَةً سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏أَتَقْضِي إِحْدَانَا الصَّلَاةَ أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كَانَتْ إِحْدَانَا تَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ لَا تُؤْمَرُ بِقَضَاءٍ ‏

ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுப்பட்டுப் போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி), “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் எங்களில் மாதவிடாய் ஏற்படும் ஒருவள், தொழுகைகளை மீட்குமாறு கட்டளையிடப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த்தி அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 505

حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ قُرَيْشٍ التَّمِيمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

‏إِنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏الَّتِي كَانَتْ تَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏شَكَتْ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الدَّمَ فَقَالَ لَهَا ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி) அவர்களின் துணைவி உம்மு ஹபீபா பின்த்தி ஜஹ்ஷு (ரலி), தமது தொடர் குருதிப் போக்கைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாள்கள் வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்!” என்று அவரிடம் கூறினார்கள். (எனினும்) உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 504

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ:‏ ‏

‏إِنَّ ‏ ‏أَمَّ حَبِيبَةَ ‏ ‏سَأَلَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الدَّمِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَأَيْتُ ‏ ‏مِرْكَنَهَا ‏ ‏مَلْآنَ دَمًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي ‏

உம்மு ஹபீபா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொடர் குருதிப் போக்கைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று அவரிடம் கூறினார்கள்.

அவர் (நின்று) குளித்து வந்த துணி அலசும் பாத்திரத்தில் குருதி நிரம்பியிருக்க நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 503

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏:‏

‏أَنَّ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏خَتَنَةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَحْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّ هَذَا ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي وَصَلِّي ‏


‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَكَانَتْ تَغْتَسِلُ فِي ‏ ‏مِرْكَنٍ ‏ ‏فِي حُجْرَةِ أُخْتِهَا ‏ ‏زَيْنَبَ بِنْتِ جَحْشٍ ‏ ‏حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَحَدَّثْتُ بِذَلِكَ ‏ ‏أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ ‏ ‏فَقَالَ يَرْحَمُ اللَّهُ ‏ ‏هِنْدًا ‏ ‏لَوْ سَمِعَتْ بِهَذِهِ الْفُتْيَا وَاللَّهِ إِنْ كَانَتْ ‏ ‏لَتَبْكِي لِأَنَّهَا كَانَتْ لَا تُصَلِّي ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو عِمْرَانَ مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِى ابْنَ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏جَاءَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَكَانَتْ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏إِلَى قَوْلِهِ تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَةَ جَحْشٍ ‏ ‏كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த்தி ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டு காலமாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது மாதவிடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, நீ (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“உம்மு ஹபீபா (ரலி), தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியுமான) ஸைனப் பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார். அவர் குளிக்கும் நீரின் நிறத்தை அவரது குருதியின் நிறம் மிகைத்திருக்கும்” என்று அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) கூறினார்.

“நான் இந்த ஹதீஸை அபூபக்ரு பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது, “(அபூஸுஃப்யானின் மனைவி) ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக, இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அழுது விடுவார். ஏனெனில், (தொடர் குருதிப் போக்காளியான) ஹிந்தா தொழாமல் இருந்து வந்தார்” என்று அபூபக்ரு (ரஹ்) கூறியதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) வழி அறிவிப்பு, “பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாகத் தொடர் குருதிப் போக்கு இருந்து வந்தது …” எனத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 502

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏:‏

‏اسْتَفْتَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَقَالَ إِنَّمَا ‏ ‏ذَلِكِ ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏


‏قَالَ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَلَكِنَّهُ شَيْءٌ فَعَلَتْهُ هِيَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏ابْنَةُ جَحْشٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏

உம்மு ஹபீபா பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் தொடர் குருதிப் போக்குடையவள்” எனக் கூறித் தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது ஒருவகை சிரைக் குருதி நோயாகும். எனவே (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்தவுடன்) குளித்துவிட்டுத் தொழுது கொள்!” எனக் கூறினார்கள். என்றாலும் உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கு(முன்னரு)ம் குளிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), “உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  உத்தரவிட்டார்கள்” என்று கூறவில்லை. மாறாக, உம்மு ஹபீபா தாமாகவே அவ்வாறு செய்து வந்தார் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான லைஸ் பின் ஸஅத் (ரஹ்) கூறுகின்றார்.

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில் நபித்தோழியின் ‘உம்மு ஹபீபா’ எனும் பெயர் இல்லாமல் ‘ஜஹ்ஷின் மகள்’ என்று மட்டும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 501

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

جَاءَتْ ‏ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلَاةَ فَقَالَ لَا إِنَّمَا ‏ ‏ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتْ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏


‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏وَإِسْنَادِهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏جَاءَتْ ‏ ‏فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ أَسَدٍ ‏ ‏وَهِيَ امْرَأَةٌ مِنَّا ‏ ‏قَالَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏زِيَادَةُ حَرْفٍ تَرَكْنَا ذِكْرَهُ ‏

ஃபாத்திமா பின்த்தி அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் குருதிப் போக்குடையவளாக இருக்கின்றேன். (குருதிப் போக்கிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “கூடாது. ஏனெனில், அது மாதவிடாயன்று; சிரைக் குருதி நோயாகும். எனவே, (வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்து விட்டால் குருதியைக் கழுவி(க் குளித்து) விட்டுத் தொழுது கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழியாக குதைபா (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸில், “ஃபாத்திமா பின்த்தி அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அஸத் (ரலி) (நபியவர்களிடம்) வந்தார். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார்” எனும் கூடுதல் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “குருதியைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள்” என்று கூடுதலாக ஒரு வரி காணப்படுகிறது. ஆயினும் (ஹம்மாத் மட்டுமே இதை அறிவிப்பதால்) அதை நாம் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம் என ஆசிரியர் முஸ்லிம் (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்தியாயம்: 3, பாடம்: 13, ஹதீஸ் எண்: 500

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏صَفِيَّةَ ‏ ‏تُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏أَنَّ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏سَأَلَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ غُسْلِ الْمَحِيضِ فَقَالَ ‏ ‏تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا ‏ ‏وَسِدْرَتَهَا ‏ ‏فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ ‏ ‏شُؤُونَ ‏ ‏رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ ‏ ‏فِرْصَةً ‏ ‏مُمَسَّكَةً ‏ ‏فَتَطَهَّرُ بِهَا فَقَالَتْ ‏ ‏أَسْمَاءُ ‏ ‏وَكَيْفَ ‏ ‏تَطَهَّرُ بِهَا فَقَالَ سُبْحَانَ اللَّهِ ‏ ‏تَطَهَّرِينَ بِهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ ‏ ‏تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ فَقَالَ تَأْخُذُ مَاءً ‏ ‏فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ‏ ‏أَوْ تُبْلِغُ الطُّهُورَ ‏ ‏ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ ‏ ‏شُؤُونَ ‏ ‏رَأْسِهَا ثُمَّ ‏ ‏تُفِيضُ ‏ ‏عَلَيْهَا الْمَاءَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏نِعْمَ النِّسَاءُ نِسَاءُ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَقَالَ قَالَ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا وَاسْتَتَرَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ ‏ ‏عَنْ ‏ ‏صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏دَخَلَتْ ‏ ‏أَسْمَاءُ بِنْتُ شَكَلٍ ‏ ‏عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَغْتَسِلُ إِحْدَانَا إِذَا طَهُرَتْ مِنْ الْحَيْضِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ فِيهِ غُسْلَ الْجَنَابَةِ ‏

அஸ்மா பின்த்தி ஷகல் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்), “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க்காகக்) குளிப்பதற்கு, சுத்தமான தண்ணீரையும் நன்கு சுத்தம் செய்யப்பட்ட இலந்தை இலைகளையும் (தண்ணீரில் போட்டுப்) பயன் படுத்திக் கொள்க! தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து, தலைமுடி நனையும்வரைக் கழுவட்டும்; பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சு கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

“அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது?” என்று அஸ்மா (ரலி) கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஸுப்ஹானல்லாஹ்! அதைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், “(மாதவிடாய்) குருதி படிந்த அடையாளத்தில் தடவிக்கொள்” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.

மேலும், அஸ்மா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றியும் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து இயன்றவரை/நன்கு சுத்தம் செய்து கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றித் தலைமுடி நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (உடம்பின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்ஸாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸுப்ஹானல்லாஹ்! அதைக் கொண்டு துப்புரவு செய்து கொள்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) தமது முகத்தை (வெட்கப்பட்டு) மறைத்துக் கொண்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கும் அபுல் அஹ்வஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அஸ்மா பின்த்தி ஷகல் எனும் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் நின்று விட்டால் அவர் குளிப்பது எவ்வாறு? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறு பதிலளித்தார்கள். அதில் பெருந்துடக்கிற்கான குளியல் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 3, பாடம்: 13, ஹதீஸ் எண்: 499

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورِ بْنِ صَفِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

سَأَلَتْ ‏ ‏امْرَأَةٌ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ تَغْتَسِلُ مِنْ حَيْضَتِهَا قَالَ فَذَكَرَتْ أَنَّهُ عَلَّمَهَا كَيْفَ تَغْتَسِلُ ثُمَّ تَأْخُذُ ‏ ‏فِرْصَةً ‏ ‏مِنْ مِسْكٍ ‏ ‏فَتَطَهَّرُ بِهَا قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ ‏ ‏تَطَهَّرِي بِهَا سُبْحَانَ اللَّهِ وَاسْتَتَرَ ‏ ‏وَأَشَارَ لَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏بِيَدِهِ عَلَى وَجْهِهِ قَالَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَاجْتَذَبْتُهَا إِلَيَّ وَعَرَفْتُ مَا أَرَادَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ ‏


‏و قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي رِوَايَتِهِ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا آثَارَ الدَّمِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ امْرَأَةً سَأَلَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَغْتَسِلُ عِنْدَ الطُّهْرِ فَقَالَ خُذِي ‏ ‏فِرْصَةً ‏ ‏مُمَسَّكَةً ‏ ‏فَتَوَضَّئِي بِهَا ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாயி(முடிவி)ன்போது எவ்வாறு குளிக்க வேண்டும் என்று ஒரு பெண்மணி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) குளிக்கும் முறையை விளக்கினார்கள். “பிறகு கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சால் தூய்மைப் படுத்திக் கொள்” என்று சொன்னார்கள்.

அந்தப் பெண்மணி, “அதை வைத்து நான் எப்படித் தூய்மைப் படுத்திக் கொள்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) (வெட்கத்துடன்) முகத்தை மூடிக் கொண்டு, “ஸுப்ஹானல்லாஹ்! அதனால் தூய்மைப் படுத்திக்கொள்” என்று மீண்டும் சொன்னார்கள்.

நபி (ஸல்) சொல்ல விரும்புவதை(யும் அவர்களது வெட்க உணர்வையும்) புரிந்து கொண்ட நான், அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்தப் பஞ்சினால் துடைத்துக் கொள்!” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

“நபி (ஸல்) (தமது முகத்தை) மூடிக் கொண்டார்கள்” என்பதை அறிவிக்கும்போது அறிவிப்பாளர் ஸுப்யான் பின் உயைனா (ரஹ்) தமது முகத்தின் மீது கையை வைத்து மூடிக் காட்டினார்.

அன்னை ஆயிஷா (ரலி) வழியாகத் தம் தாயார் மூலமாக அறிவிக்கும் மன்ஸூர் (ரஹ்) அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, (மாதவிடாயிலிருந்து) துப்புரவு செய்து கொள்ளும் போது எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சைப் பயன் படுத்தித் துப்புரவு செய்து கொள்வாயாக! என்று சொன்னார்கள்” என்றும் பிற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

இப்னு அபீ உமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரத்தம் படிந்த இடங்களை” என்று பன்மையில் அன்னை ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.