அத்தியாயம்: 1, பாடம்: 65, ஹதீஸ் எண்: 208

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مَرْوَانَ الْفَزَارِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ:‏ ‏

‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَدَأَ الْإِسْلَامُ ‏ ‏غَرِيبًا ‏ ‏وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا ‏ ‏فَطُوبَى ‏ ‏لِلْغُرَبَاءِ ‏

“சிறுபான்மை மக்களிடையேதான் இஸ்லாத்தின் மீளெழுச்சி தொடங்கியது; அது தொடங்கிய நிலைக்கே மீளும். (அந்த) சிறும்பான்மையினருக்கு வாழ்த்துகள் உண்டாகட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 64, ஹதீஸ் எண்: 207

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏كُنَّا عِنْدَ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ أَيُّكُمْ سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ الْفِتَنَ فَقَالَ قَوْمٌ نَحْنُ سَمِعْنَاهُ فَقَالَ لَعَلَّكُمْ تَعْنُونَ ‏ ‏فِتْنَةَ ‏ ‏الرَّجُلِ فِي أَهْلِهِ وَجَارِهِ قَالُوا أَجَلْ قَالَ تِلْكَ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصِّيَامُ وَالصَّدَقَةُ وَلَكِنْ أَيُّكُمْ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ الْفِتَنَ الَّتِي ‏ ‏تَمُوجُ ‏ ‏مَوْجَ الْبَحْرِ قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏فَأَسْكَتَ الْقَوْمُ فَقُلْتُ أَنَا قَالَ أَنْتَ ‏ ‏لِلَّهِ أَبُوكَ ‏ ‏قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تُعْرَضُ الْفِتَنُ عَلَى الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا فَأَيُّ قَلْبٍ ‏ ‏أُشْرِبَهَا ‏ ‏نُكِتَ ‏ ‏فِيهِ نُكْتَةٌ سَوْدَاءُ وَأَيُّ قَلْبٍ ‏ ‏أَنْكَرَهَا ‏ ‏نُكِتَ ‏ ‏فِيهِ ‏ ‏نُكْتَةٌ ‏ ‏بَيْضَاءُ حَتَّى تَصِيرَ عَلَى قَلْبَيْنِ عَلَى أَبْيَضَ مِثْلِ ‏ ‏الصَّفَا ‏ ‏فَلَا تَضُرُّهُ فِتْنَةٌ مَا دَامَتْ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَالْآخَرُ أَسْوَدُ ‏ ‏مُرْبَادًّا ‏ ‏كَالْكُوزِ ‏ ‏مُجَخِّيًا ‏ ‏لَا يَعْرِفُ مَعْرُوفًا وَلَا يُنْكِرُ مُنْكَرًا إِلَّا مَا ‏ ‏أُشْرِبَ ‏ ‏مِنْ هَوَاهُ ‏

‏قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏وَحَدَّثْتُهُ ‏ ‏أَنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا يُوشِكُ أَنْ يُكْسَرَ قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَكَسْرًا لَا أَبَا لَكَ فَلَوْ أَنَّهُ فُتِحَ لَعَلَّهُ كَانَ يُعَادُ قُلْتُ لَا بَلْ يُكْسَرُ وَحَدَّثْتُهُ أَنَّ ذَلِكَ الْبَابَ رَجُلٌ يُقْتَلُ أَوْ يَمُوتُ حَدِيثًا لَيْسَ بِالْأَغَالِيطِ


‏قَالَ ‏ ‏أَبُو خَالِدٍ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِسَعْدٍ ‏ ‏يَا ‏ ‏أَبَا مَالِكٍ ‏ ‏مَا أَسْوَدُ ‏ ‏مُرْبَادًّا ‏ ‏قَالَ شِدَّةُ الْبَيَاضِ فِي سَوَادٍ قَالَ قُلْتُ فَمَا الْكُوزُ ‏ ‏مُجَخِّيًا ‏ ‏قَالَ مَنْكُوسًا ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ الْفَزَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مَالِكٍ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا قَدِمَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏مِنْ عِنْدِ ‏ ‏عُمَرَ ‏ ‏جَلَسَ فَحَدَّثَنَا فَقَالَ إِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمْسِ لَمَّا جَلَسْتُ إِلَيْهِ سَأَلَ أَصْحَابَهُ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْفِتَنِ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏أَبِي خَالِدٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ تَفْسِيرَ ‏ ‏أَبِي مَالِكٍ ‏ ‏لِقَوْلِهِ مُرْبَادًّا مُجَخِّيًا ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَعَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ ‏ ‏قَالَ مَنْ يُحَدِّثُنَا أَوْ قَالَ أَيُّكُمْ يُحَدِّثُنَا وَفِيهِمْ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏مَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْفِتْنَةِ قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏أَنَا وَسَاقَ الْحَدِيثَ كَنَحْوِ حَدِيثِ ‏ ‏أَبِي مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيٍّ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ قَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالْأَغَالِيطِ وَقَالَ ‏ ‏يَعْنِي أَنَّهُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم

நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது “சோதனை (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர்கள் உங்களுள் யாவர்?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். அப்போது சிலர், “நாங்கள் செவியுற்றுள்ளோம்” என்று கூறினர். உமர் (ரலி), “ஒருவர், தம் குடும்பத்தாரிடமும் அண்டை வீட்டாரிடமும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதையே நீங்கள் நினைக்கிறீர்கள் போலும்” என்று கூறினார்கள். அதற்கு அம்மக்கள், “ஆம்” என்றனர். அதற்கு, “தொழுகை, நோன்பு, தான-தர்மம் செய்தல் ஆகியவை அவ்வகை சோதனைக்கான பரிகாரங்களாக அமைந்து விடும். (அதுவன்று!) கடல் அலைகளைப் போன்று அடுக்கடுக்காகத் தோன்றும் என நபி (ஸல்) கூறிய (அரசியல் குழப்பம் எனும்) ஃபித்னாவைப் பற்றிச் செவியுற்றவர் உங்களில் யார்?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். மக்கள் அமைதியாக இருந்தனர். நான் (முன்வந்து), “நான் (செவியுற்றுள்ளேன்)” என்று கூறினேன். “நீங்களா (செவியுற்றவர்?) உங்கள் தந்தை அல்லாஹ்வுக்கு உரியவராகட்டும்! (சொல்லுங்கள்)” என்று உமர் (ரலி) கேட்க, நான் கூறலானேன்:

“ஒரு கோரையை அடுத்து இன்னொரு கோரையாக வைத்துப் பாய் பின்னப்படுவதைப் போன்று மக்களின் உள்ளங்களில் சோதனைகள் பின்னப்படும். அந்தச் சோதனைகளில் அமிழ்ந்து விடுகிற உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி இடப்படும்; (சோதனைகளை மதிக்காமல்) நிராகரித்து விடுகிற உள்ளத்தில் ஒரு வெண்புள்ளி இடப்படும். இவ்வாறு சோதனைகள் இருவிதமான உள்ளங்களில் ஏற்படுகின்றன. ஒன்று, வெண்பாறை போன்று தூய்மையானது; வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும்வரை எந்தச் சோதனையும் அதற்கு இடரளிக்காது. மற்றொன்று, சிறிதளவே வெண்மை கலந்த கருத்த உள்ளம். அது தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜாவைப் போன்று நல்லதையும் அறியாது; தீயதையும் நிராகரிக்காது. தன் மனோ இச்சையைப் பின்பற்றுவதைத் தவிர வேறெதையும் அது அறியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச் செவியுற்றேன்.

(தொடர்ந்து) “உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடிய கதவு ஒன்று உண்டு; அக்கதவு (விரைவில்) உடைக்கப்படக் கூடும்” என்று கூறினேன். உடனே உமர் (ரலி) அவர்கள், “நீர் தந்தையற்றுப் போவீர்! அது உடைக்கத்தான் படுமா? அது திறக்கப்பட்டால் மீண்டும் அது மூடப்பட முடியுமே!” என்று வினவினார்கள். நான், “இல்லை; அது (திறக்கப்படாமல்) உடைக்கத்தான் படும்” என்று சொன்னேன். மேலும் நான் அவர்களிடம், “அந்தக் கதவு என்பது கொல்லப்பட/இறந்துபோக இருக்கும் ஒரு மனிதர்தாம். இது உண்மைச் செய்தி; கட்டுக்கதையன்று” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)


குறிப்பு:

ஸஅத் பின் தாரிக் (ரஹ்) அவர்களிடம், “அபூமாலிக்கே! (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஸ்வது முர்பாத்தன்’ என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “கறுப்பில் தூய வெள்ளை” என்று கூறினார்கள். “அல்கூஸு முஜக்கியன் என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு, “தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜா” என்று பதிலளித்தார்கள் என இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூகாலித் (ரஹ்) கூறுகிறார்.

ரிப்யீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் நேற்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவரிடம் அமர்ந்திருந்தபோது அவர்கள் தம் தோழர்களிடம், உங்களில் (இனி தலைதூக்கவிருக்கும் அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதை நினைவில் வைத்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள்” என்று ஹுதைஃபா (ரலி) தொடங்கியதாகக் குறிப்பிடப் படுகிறது. அபூமாலிக் ஸஅத் பின் தாரிக் (ரஹ்) அளித்த விளக்கம் அதில் இடம்பெறவில்லை.

முஹம்மது பின் அபீ அதீ (ரஹ்) வழி அறிவிப்பில், உமர் (ரலி) மக்களிடம் “(அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை எமக்கு அறிவிப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள். அங்கு இருந்த ஹுதஃபா (ரலி), “நான் (கேட்டிருக்கின்றேன்)” என்று தொடங்கியதாகவும் இறுதியில், “இது கட்டுக்கதையன்று; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதுதான்” என்று சொன்னதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 64, ஹதீஸ் எண்: 206

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَدِيثَيْنِ قَدْ رَأَيْتُ أَحَدَهُمَا وَأَنَا أَنْتَظِرُ الْآخَرَ حَدَّثَنَا ‏ ‏أَنَّ الْأَمَانَةَ نَزَلَتْ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ ثُمَّ نَزَلَ الْقُرْآنُ فَعَلِمُوا مِنْ الْقُرْآنِ وَعَلِمُوا مِنْ السُّنَّةِ ‏

‏ثُمَّ حَدَّثَنَا عَنْ رَفْعِ الْأَمَانَةِ قَالَ ‏ ‏يَنَامُ الرَّجُلُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ ‏ ‏الْوَكْتِ ‏ ‏ثُمَّ يَنَامُ النَّوْمَةَ فَتُقْبَضُ الْأَمَانَةُ مِنْ قَلْبِهِ فَيَظَلُّ أَثَرُهَا مِثْلَ ‏ ‏الْمَجْلِ ‏ ‏كَجَمْرٍ دَحْرَجْتَهُ عَلَى رِجْلِكَ ‏ ‏فَنَفِطَ ‏ ‏فَتَرَاهُ ‏ ‏مُنْتَبِرًا ‏ ‏وَلَيْسَ فِيهِ شَيْءٌ ثُمَّ أَخَذَ حَصًى فَدَحْرَجَهُ عَلَى رِجْلِهِ فَيُصْبِحُ النَّاسُ يَتَبَايَعُونَ لَا يَكَادُ أَحَدٌ يُؤَدِّي الْأَمَانَةَ حَتَّى يُقَالَ إِنَّ فِي بَنِي فُلَانٍ رَجُلًا أَمِينًا حَتَّى يُقَالَ لِلرَّجُلِ مَا ‏ ‏أَجْلَدَهُ ‏ ‏مَا أَظْرَفَهُ مَا أَعْقَلَهُ وَمَا فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ وَلَقَدْ أَتَى عَلَيَّ زَمَانٌ وَمَا أُبَالِي أَيَّكُمْ ‏ ‏بَايَعْتُ ‏ ‏لَئِنْ كَانَ مُسْلِمًا ‏ ‏لَيَرُدَّنَّهُ ‏ ‏عَلَيَّ دِينُهُ وَلَئِنْ كَانَ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا لَيَرُدَّنَّهُ عَلَيَّ ‏ ‏سَاعِيهِ ‏ ‏وَأَمَّا الْيَوْمَ فَمَا كُنْتُ لِأُبَايِعَ مِنْكُمْ إِلَّا فُلَانًا وَفُلَانًا


و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

(நம்பி ஒப்படைக்கப்படும்) அமானிதம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு இரு செய்திகளைக் கூறியிருந்தார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) கண்டு கொண்டேன்; மற்றொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

“மனிதர்களின் ஆழ்மனத்தில் அமானிதம் என்பது (ஓர் இயல்பாக அல்லாஹ்வால்) அருளப்பட்டது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (எனது வழியான) ‘ஸுன்னா’விலிருந்தும் அதை(க் கூடுதலாக) மக்கள் அறிந்து (அதிகப்படுத்திக்) கொண்டார்கள்” என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள்.

மேலும், “மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து (நம்பி ஒப்படைக்கப்படுவதைப் பாதுகாக்கும்) அமானிதத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதன் அடையாளம் ஒரு சிறுபுள்ளி அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்கும்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அதன் அடையாளம் (கடின உழைப்பால் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்து விடும். (அமானித இழப்பு என்பது) உனது காலில் தீக்கங்கை உருட்டி விட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வைக்கு அது உப்பிப் பெரியதாகத் தெரியும். ஆனால், அதனுள் ஒன்றும் இருக்காது” என்று கூறும்போது நபி (ஸல்) சிறு கற்களை எடுத்துத் தமது காலால் உருட்டிக் காட்டினார்கள்.

“பொழுது விடிந்ததும் மக்கள் தங்களிடையே கொடுக்கல்-வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே அமானிதம் பேண மாட்டார்கள். ‘இன்னாருடைய மக்களில் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் இருக்கின்றார்’ என்று சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி ‘அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?’ என்று (சிறப்பித்துக்) கூறப்படும். ஆனால், அவருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது” என்பது அமானிதம் (அருகிப் போவது) பற்றி நபி (ஸல்) கூறியிருந்த இன்னொரு செய்தியாகும்.

ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யார்-யாரிடம் கொடுக்கல்-வாங்கல் செய்யலாம் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்ததில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னிடம்) அவர் பட்ட கடனை மீட்டுத் தந்துவிடும். கிறிஸ்துவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னார் என்று (பார்த்துப் பார்த்துக்) கொடுக்கல்-வாங்கல் செய்ய வேண்டிய காலமாகிவிட்டது.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 63, ஹதீஸ் எண்: 205

و حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمَلِيحِ ‏:‏ ‏

‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ ‏ ‏عَادَ ‏ ‏مَعْقِلَ بْنَ يَسَارٍ ‏ ‏فِي مَرَضِهِ فَقَالَ لَهُ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏إِنِّي مُحَدِّثُكَ بِحَدِيثٍ لَوْلَا أَنِّي فِي الْمَوْتِ لَمْ أُحَدِّثْكَ بِهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا ‏ ‏يَجْهَدُ ‏ ‏لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمْ الْجَنَّةَ ‏

மஅகில் பின் யஸார் (ரலி) நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிக்க (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) வந்திருந்தார்.

அப்போது, “உங்களுக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகின்றேன். நான் இறக்கும் தருவாயில் இல்லாவிட்டால் அதை நான் அறிவிக்க மாட்டேன். ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள் மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களு(ள் சொர்க்கம் செல்வோரு)டன் சேர்ந்து அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் செவியுற்றிருக்கின்றேன்” என்று மஅகில் பின் யஸார் (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக அபுல் மலீஹ் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 1.63, ஹதீஸ் எண்: 204

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏دَخَلَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ ‏ ‏عَلَى ‏ ‏مَعْقَلِ بْنِ يَسَارٍ ‏ ‏وَهُوَ وَجِعٌ فَسَأَلَهُ فَقَالَ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا لَمْ أَكُنْ حَدَّثْتُكَهُ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا ‏ ‏يَسْتَرْعِي ‏ ‏اللَّهُ عَبْدًا رَعِيَّةً يَمُوتُ حِينَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهَا إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ‏


قَالَ أَلَّا كُنْتَ حَدَّثْتَنِي هَذَا قَبْلَ الْيَوْمِ قَالَ مَا حَدَّثْتُكَ أَوْ لَمْ أَكُنْ لَأُحَدِّثَكَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ يَعْنِي الْجُعْفِيَّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الْحَسَنُ ‏ ‏كُنَّا عِنْدَ ‏ ‏مَعْقِلِ بْنِ يَسَارٍ ‏ ‏نَعُودُهُ فَجَاءَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏إِنِّي سَأُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِهِمَا ‏

மஅகில் பின் யஸார் (ரலி) நோயுற்றிருந்தபோது (உடல் நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) சென்றிருந்தார்.

அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி), “முன்பு நான் உங்களிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கின்றேன்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, தம் பொறுப்பிலிருந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து விட்டாரெனில், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்.

அப்போது உபைதுல்லாஹ் (ரஹ்), “இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்க வில்லையே?” என்று கேட்டார். மஅகில் (ரலி), “நான் உங்களுக்கு(க் காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” அல்லது “உங்களிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவிக்காமல் இருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக ஹஸன் அல் பஸரீ (ரஹ்)


குறிப்பு:

ஹிஷம் (ரஹ்) வழி அறிவிப்பில் “நாங்கள் மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அப்போது (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) வந்தார். அவரிடம் மஅகில் (ரலி), நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கப் போகின்றேன்… என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸின் பொருள்பட அறிவித்தார்கள்” என்று ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 63, ஹதீஸ் எண்: 203

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَشْهَبِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏عَادَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ ‏ ‏مَعْقِلَ بْنَ يَسَارٍ الْمُزنِيَّ ‏ ‏فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ قَالَ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ عَلِمْتُ أَنَّ لِي حَيَاةً مَا حَدَّثْتُكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ عَبْدٍ ‏ ‏يَسْتَرْعِيهِ ‏ ‏اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ‏

மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) நோய்வாய்ப்பட்டு இறந்தார். (அதற்கு முன்னர்) அவரை உடல் நலம் விசாரிப்பதற்காக (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) சென்றிருந்தார்.

அப்போது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை இப்போது உங்களுக்கு அறிவிக்கப்போகின்றேன். நான் இன்னும் (சிலகாலம்) உயிர் வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) நான் அறிவிக்கப்போவதில்லை. (கேளுங்கள்:) குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, தம் பொறுப்பிலிருந்த மக்களை அவர் ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்து விட்டாரெனில், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்” என மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக ஹஸன் அல் பஸரீ (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 62, ஹதீஸ் எண்: 202

حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ الْأَحْوَلُ ‏ ‏أَنَّ ‏ ‏ثَابِتًا ‏ ‏مَوْلَى ‏ ‏عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَخْبَرَهُ :‏ ‏‏

‏أَنَّهُ لَمَّا كَانَ بَيْنَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏وَبَيْنَ ‏ ‏عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ ‏ ‏مَا كَانَ ‏ ‏تَيَسَّرُوا ‏ ‏لِلْقِتَالِ فَرَكِبَ ‏ ‏خَالِدُ بْنُ الْعَاصِ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏فَوَعَظَهُ ‏ ‏خَالِدٌ ‏ ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களுக்கும் அன்பஸா பின் அபீஸுப்யான் (ரலி) அவர்களுக்குமிடையே (ஒரு வாய்க்கால் தொடர்பாக) சண்டை மூளும் நிலை ஏற்பட்டபோது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் காலித் பின் அல்ஆஸ் (ரலி) வந்து (அவரை சமாதானப் படுத்தும் வகையில்) அறிவுரை கூறினார். அதற்கு, “தமது செல்வத்தைக் காப்பதற்காகப் போராடும்போது ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் அவர் உயிர்தியாகி (ஷஹீத்) ஆவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியது உங்களுக்குத் தெரியாதா?” அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 62, ஹதீஸ் எண்: 201

حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي قَالَ فَلَا تُعْطِهِ مَالَكَ قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي قَالَ قَاتِلْهُ قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي قَالَ فَأَنْتَ شَهِيدٌ قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ قَالَ هُوَ فِي النَّارِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு ஒருவன் வந்தால் (நான் செய்ய வேண்டியது) என்னவெனக் கூறுங்கள்” என்று கேட்டார். “அவனுக்கு உமது செல்வத்தை(விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவன் என்னுடன் சண்டையிட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீயும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்..?” என்று அவர் கேட்டார். “நீ உயிர்தியாகி(ஷஹீத்) ஆகிவிடுவாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நான் அவனைக் கொன்று விட்டால்?” என்று அவர் கேட்டார். அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 200

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏وَائِلِ بْنِ حُجْرٍ ‏ ‏قَالَ :‏ ‏

كُنْتُ عِنْدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَاهُ رَجُلَانِ يَخْتَصِمَانِ فِي أَرْضٍ فَقَالَ أَحَدُهُمَا إِنَّ هَذَا ‏ ‏انْتَزَى ‏ ‏عَلَى أَرْضِي يَا رَسُولَ اللَّهِ فِي الْجَاهِلِيَّةِ وَهُوَ ‏ ‏امْرُؤُ الْقَيْسِ بْنُ عَابِسٍ الْكِنْدِيُّ ‏ ‏وَخَصْمُهُ ‏ ‏رَبِيعَةُ بْنُ عِبْدَانَ ‏ ‏قَالَ ‏ ‏بَيِّنَتُكَ ‏ ‏قَالَ لَيْسَ لِي بَيِّنَةٌ قَالَ يَمِينُهُ قَالَ إِذَنْ يَذْهَبُ بِهَا قَالَ لَيْسَ لَكَ إِلَّا ذَاكَ قَالَ فَلَمَّا قَامَ لِيَحْلِفَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ‏ ‏اقْتَطَعَ ‏ ‏أَرْضًا ظَالِمًا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ‏


قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏رَبِيعَةُ بْنُ عَيْدَانَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நான் இருந்தபோது, ஒரு நிலம் தொடர்பான வழக்கை இருவர் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் இவர், எனது நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டார்” என்று கூறினார். (அந்த வழக்குவாதியான) அவர், இம்ரஉல் கைஸ் பின் ஆபிஸ் அல்கிந்தீ என்பவராவார். அவருடைய பிரதிவாதி, ரபீஆ பின் இப்தான் என்பவராவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உமது ஆதாரம் என்ன?” என்று (வாதியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், “என்னிடம் ஆதாரம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார். “எனில், (பிரதிவாதியான) இவரது சத்தியம்தான் (தீர்வு)” என்று சொன்னார்கள். “அவர் (பொய்ச் சத்தியம் செய்து) அந்த நிலத்தைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதைத் தவிர உம(து வழக்கு)க்கு வேறு தீர்வில்லை” என்று கூறினார்கள். சத்தியம் செய்வதற்காக பிரதிவாதி எழுந்தபோது, “அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக் கொள்பவர், தம்மீது கோபம் கொண்ட நிலையிலேயே (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி)


குறிப்பு:

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், பிரதிவாதியின் பெயரான ரபீஆ பின் இப்தான் என்பதற்கு பதிலாக ரபீஆ பின் அய்தான் என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 61, ஹதீஸ் எண்: 199

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَهَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏وَأَبُو عَاصِمٍ الْحَنَفِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

جَاءَ رَجُلٌ مِنْ ‏ ‏حَضْرَمَوْتَ ‏ ‏وَرَجُلٌ مِنْ ‏ ‏كِنْدَةَ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏الْحَضْرَمِيُّ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا قَدْ غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي كَانَتْ لِأَبِي فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْحَضْرَمِيِّ أَلَكَ ‏ ‏بَيِّنَةٌ ‏ ‏قَالَ لَا قَالَ فَلَكَ يَمِينُهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لَا يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ فَقَالَ لَيْسَ لَكَ مِنْهُ إِلَّا ذَلِكَ فَانْطَلَقَ لِيَحْلِفَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا أَدْبَرَ ‏ ‏أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالِهِ لِيَأْكُلَهُ ظُلْمًا لَيَلْقَيَنَّ اللَّهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ ‏

நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) ‘ஹள்ர மவ்த்’ எனும் இடத்தைச் சேர்ந்த (ஹள்ரமீ) ஒருவரும் ‘கிந்தா’ எனும் குலத்தைச் சேர்ந்த (கிந்தீ) இன்னொருவரும் வந்தனர். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் பறித்துக் கொண்டுவிட்டார்” என்று ஹள்ரமீ வழக்குரைத்தார். அதற்கு, “அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்து வருகின்றேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கிந்தீ மறுப்புரைத்தார்.

ஹள்ரமீயிடம், “உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர், “‘இல்லை” என்று பதிலளித்தார். “எனில், அவரது சத்தியம்தான் உமக்கு(த் தீர்வு)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவர் பொல்லாதவர்; தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார்; விவகாரம் என்று வந்துவிட்டால் நேர்மையைப் பற்றி அவர் சிந்தித்தும் பார்ப்பவரல்லர்” என்று ஹள்ரமீ கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதைத் தவிர உம(து வழக்கு)க்கு வேறு தீர்வில்லை” என்று கூறினார்கள். சத்தியம் செய்வதற்காக (கிந்தீ) கிளம்பினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி)