அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 437

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏شَبِيبِ بْنِ غَرْقَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الْخَوْلَانِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ نَازِلًا عَلَى ‏ ‏عَائِشَةَ ‏:‏

فَاحْتَلَمْتُ فِي ثَوْبَيَّ فَغَمَسْتُهُمَا فِي الْمَاءِ فَرَأَتْنِي جَارِيَةٌ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏فَأَخْبَرَتْهَا فَبَعَثَتْ إِلَيَّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقَالَتْ ‏ ‏مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ بِثَوْبَيْكَ قَالَ قُلْتُ رَأَيْتُ مَا يَرَى النَّائِمُ فِي مَنَامِهِ قَالَتْ هَلْ رَأَيْتَ فِيهِمَا شَيْئًا قُلْتُ لَا قَالَتْ فَلَوْ رَأَيْتَ شَيْئًا غَسَلْتَهُ لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَحُكُّهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَابِسًا بِظُفُرِي ‏

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒருநாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு, உறக்கத்தில் விந்து வெளியாகிவிட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் ஊற வைத்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்து விட்டார். அப்போது ஆயிஷா (ரலி) என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்). அப்போது அவர்கள், “உங்கள் இரு ஆடைகளையும் அவ்வாறு செய்யக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். நான், “தூங்கக் கூடிய(ஓர் ஆணான)வர் கனவில் காண்பதை நான் கண்டு விட்டேன்” என்று கூறினேன். “அந்த இரு ஆடைகளில் (விந்து) எதையும் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். “அப்படியே எதையேனும் நீங்கள் கண்டிருந்தாலும் ஆடைகளைக் கழுவத் தேவையில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் விந்து பட்டுக் காய்ந்து போயிருக்கும் பகுதியை நான் என் நகத்தால் சுரண்டித்தான் விடுவேன் (கழுவ மாட்டேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்-கவ்லானீ (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 436

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏سُلَيْمَانَ بْنَ يَسَارٍ ‏ ‏عَنْ الْمَنِيِّ يُصِيبُ ثَوْبَ الرَّجُلِ أَيَغْسِلُهُ أَمْ يَغْسِلُ الثَّوْبَ ‏ ‏فَقَالَ أَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْسِلُ الْمَنِيَّ ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلَاةِ فِي ذَلِكَ الثَّوْبِ وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغَسْلِ فِيهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏فَحَدِيثُهُ كَمَا قَالَ ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَغْسِلُ الْمَنِيَّ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏وَعَبْدُ الْوَاحِدِ ‏ ‏فَفِي حَدِيثِهِمَا قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது ஆடையில்) விந்து பட்ட இடத்தை (மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த ஆடையில் கழுவியதற்குரிய (ஈர) அடையாளத்தை நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)


குறிப்புகள்:

ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்களிடம், “ஒருவரது ஆடையில் விந்து பட்ட இடத்தை மட்டும் கழுவ வேண்டுமா? அந்த ஆடையை(முழுவதுமாக)க் கழுவ வேண்டுமா?” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ரு பின் மைமூன் (ரஹ்) கேட்டபோது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் மேற்கண்டவாறு செவியுற்றதாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்) கூறினார்.

இப்னு அபீஸாயிதா (ரஹ்) வழி அறிவிப்பில், “விந்து பட்ட இடத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

இப்னுல் முபாரக் (ரஹ்), அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகிய இருவரது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடை(யில் விந்து பட்டிருக்கும்) பகுதியை நான் கழுவுவேன்’ என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 435

و حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏وَهَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏:‏

‏فِي الْمَنِيِّ قَالَتْ ‏ ‏كُنْتُ أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏


‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ حَسَّانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مَهْدِيِّ بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ الْأَحْدَبِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْرَائِيلُ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَمُغِيرَةَ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فِي حَتِّ الْمَنِيِّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ ‏

ஆயிஷா (ரலி), விந்து பற்றிக் கூறுகையில், “அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டி விடுவது வழக்கம்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அல்-அஸ்வது (ரஹ்) & ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 32, ஹதீஸ் எண்: 434

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْشَرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏وَالْأَسْوَدِ :‏

‏ ‏أَنَّ ‏ ‏رَجُلًا ‏ ‏نَزَلَ ‏ ‏بِعَائِشَةَ ‏فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ ‏ ‏نَضَحْتَ ‏ ‏حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَرْكًا فَيُصَلِّي فِيهِ ‏

ஒருவர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவிக் கொண்டிருந்தார். (அதைக் கண்ட அன்னை) ஆயிஷா (ரலி), “அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்து விடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டிருப்பதை நன்கு சுரண்டி விடுவேன். அந்த ஆடையை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்) & அல்-அஸ்வத் (ரஹ்)


குறிப்பு :

இந்த ஹதீஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் ஹதீஸ் எண் 437இல் பதிவாகியுள்ளன. தூக்கத்தில் விந்து வெளியானால் குளிக்காமல் தொழக் கூடாது. எனினும் விந்து, சிறுநீரைப் போன்று அசுத்தமானதன்று. ஆடையில் விந்து பரவிய இடத்தில் தண்ணீர் தெளித்தோ சுரண்டி விட்டோ அதே ஆடையோடு தொழுவதற்குத் தடையில்லை.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 433

و حَدَّثَنِيهِ ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏:‏

أَنَّ ‏ ‏أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ ‏ ‏وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ اللَّاتِي بَايَعْنَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهِيَ أُخْتُ ‏ ‏عُكَّاشَةَ بْنِ مِحْصَنٍ ‏ ‏أَحَدُ ‏ ‏بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ ‏ ‏قَالَ ‏‏أَخْبَرَتْنِي أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِابْنٍ لَهَا لَمْ يَبْلُغْ أَنْ يَأْكُلَ الطَّعَامَ ‏ ‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏أَخْبَرَتْنِي أَنَّ ابْنَهَا ذَاكَ ‏ ‏بَالَ فِي ‏ ‏حَجْرِ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَدَعَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَاءٍ ‏ ‏فَنَضَحَهُ ‏ ‏عَلَى ثَوْبِهِ وَلَمْ يَغْسِلْهُ غَسْلًا ‏

திடஉணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் குழதையுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள்; அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்)


குறிப்பு :

இந்த அறிவிப்பில் உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி) என்ற நபித்தோழியைப் பற்றி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தவர்; ஆரம்பத்தில் நாடு துறந்து ஹிஜ்ரத் சென்ற பெண்மணிகளுள் ஒருவர்; பனூ அஸத் பின் குஸைமா குலத்தைச் சேர்ந்த உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரி” என்று அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் சிறப்பு அறிமுகம் செய்கின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 432

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ ‏:‏

‏أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِابْنٍ لَهَا لَمْ يَأْكُلْ الطَّعَامَ فَوَضَعَتْهُ فِي ‏ ‏حَجْرِهِ ‏ ‏فَبَالَ قَالَ فَلَمْ يَزِدْ عَلَى أَنْ ‏ ‏نَضَحَ ‏ ‏بِالْمَاءِ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திடஉணவு உட்கொள்ளாத என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு வந்து அவர்களது மடியில் வைத்தேன். அவர்கள் மீது குழந்தை சிறுநீர் கழித்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சிறுநீர் பட்ட இடத்தில்) தண்ணீரைத் தெளித்து விட்டதைத் தவிர கூடுதலாக ஏதும் செய்யவில்லை.

அறிவிப்பாளர் : உம்மு கைஸ் பின்த்தி மிஹ்ஸன் (ரலி)


குறிப்பு :

இபுனு உஅய்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “… தண்ணீர் கொண்டுவரச் சொல்லித் தெளித்துக் கொண்டார்கள்” என்று மட்டும் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 431

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏ ‏

‏أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِصَبِيٍّ يَرْضَعُ ‏ ‏فَبَالَ فِي ‏ ‏حَجْرِهِ ‏ ‏فَدَعَا بِمَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ ‏


‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால்குடி மாறாத ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்களது மடியில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரைத் தெளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 430

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُؤْتَى بِالصِّبْيَانِ ‏ ‏فَيُبَرِّكُ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏وَيُحَنِّكُهُمْ ‏ ‏فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ بَوْلَهُ وَلَمْ يَغْسِلْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அக்குழந்தைகளின் அருள்வளத்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் (மட்டும்) தண்ணீரைத் தெளித்தார்கள்; (முற்றாகக்) கழுவவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 30, ஹதீஸ் எண்: 429

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ أَبِي طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏وَهُوَ عَمُّ ‏ ‏إِسْحَقَ ‏ ‏قَالَ :‏ ‏

‏بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ ‏ ‏أَصْحَابُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَهْ ‏ ‏مَهْ ‏ ‏قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏تُزْرِمُوهُ ‏ ‏دَعُوهُ فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعَاهُ فَقَالَ لَهُ إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَأَمَرَ رَجُلًا مِنْ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ ‏ ‏فَشَنَّهُ ‏ ‏عَلَيْهِ ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தபோது, கிராமவாசி ஒருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள், “நிறுத்து! நிறுத்து!” என்று கூவினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டு விட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பின்னர் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அழைத்து, “பள்ளிவாசல்கள் என்பன சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்” என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் (கழிக்கப்பட்ட இடத்தின்) மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 30, ஹதீஸ் எண்: 428

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الدَّرَاوَرْدِيِّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏:‏

‏يَذْكُرُ أَنَّ أَعْرَابِيًّا قَامَ إِلَى نَاحِيَةٍ فِي الْمَسْجِدِ فَبَالَ فِيهَا فَصَاحَ بِهِ النَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعُوهُ فَلَمَّا فَرَغَ أَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِذَنُوبٍ ‏ ‏فَصُبَّ عَلَى بَوْلِهِ ‏

ஒரு கிராமவாசி பள்ளிவாசலின் ஒரு பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார். அப்போது அவரைப் பார்த்து மக்கள் சப்தமிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அவர் (சிறுநீர் கழித்து) முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். அவ்வாறே (தண்ணீர் கொண்டுவரப்பட்டு) அது சிறுநீர் (கழிக்கப்பட்ட இடத்தின்) மீது ஊற்றப்பட்டது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி)