அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2183

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏‏أَبَا جَمْرَةَ الضُّبَعِيَّ ‏ ‏قَالَ: ‏ ‏

تَمَتَّعْتُ ‏ ‏فَنَهَانِي نَاسٌ عَنْ ذَلِكَ فَأَتَيْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَمَرَنِي بِهَا ‏قَالَ ثُمَّ انْطَلَقْتُ إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏فَنِمْتُ فَأَتَانِي آتٍ فِي مَنَامِي فَقَالَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ قَالَ فَأَتَيْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَأَخْبَرْتُهُ بِالَّذِي رَأَيْتُ فَقَالَ ‏ ‏اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ ‏ ‏أَبِي الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் தமத்துஉ ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யக் கூடாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அவர்கள் அதைச் செய்யுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.

பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி, “ஒப்புக் கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலக்காத, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)” என்று கூறினார்.

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காஸிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2182

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَذِهِ عُمْرَةٌ ‏ ‏اسْتَمْتَعْنَا ‏ ‏بِهَا فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏فَلْيَحِلَّ الْحِلَّ كُلَّهُ فَإِنَّ الْعُمْرَةَ قَدْ دَخَلَتْ فِي الْحَجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

“இது, நாம் (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமிடையே இடைவெளி விட்டுப்) பயனடைந்த
உம்ராவாகும். ஆகவே, (உங்களில்) எவரிடம் பலிப் பிராணி இல்லையோ அவர்
முழுமையாக இஹ்ராமிலிருந்து விடுபடட்டும். ஏனெனில், மறுமை நாள்வரை
ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2181

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏وَقَدِمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ وَأَمَرَ أَصْحَابَهُ أَنْ يُحَوِّلُوا إِحْرَامَهُمْ بِعُمْرَةٍ إِلَّا مَنْ كَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘தூ தவா’ எனும்
பள்ளத்தாக்கில் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். துல்ஹஜ் நான்காவது நாள்
மக்காவிற்கு வந்து, தம் தோழர்களில் பலிப் பிராணியைத் தம்முடன்
கொண்டு வந்தவர்கள் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக
மாற்றிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2180

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّدُوسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَيُّوبُ ‏‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ :‏

‏قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ لِأَرْبَعٍ ‏ ‏خَلَوْنَ ‏ ‏مِنْ الْعَشْرِ وَهُمْ يُلَبُّونَ بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)
பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக தல்பியாச் சொன்னவர்களாக
(மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக
ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2179

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ : ‏

‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَقَدِمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ فَصَلَّى الصُّبْحَ وَقَالَ لَمَّا صَلَّى الصُّبْحَ ‏ ‏مَنْ شَاءَ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَجْعَلْهَا عُمْرَةً ‏‏و حَدَّثَنَاه ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ الْمُبَارَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو شِهَابٍ ‏


ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ كَثِيرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا ‏ ‏رَوْحٌ ‏ ‏وَيَحْيَى بْنُ كَثِيرٍ ‏ ‏فَقَالَا كَمَا قَالَ ‏ ‏نَصْرٌ ‏ ‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ ‏‏وَأَمَّا ‏ ‏أَبُو شِهَابٍ ‏ ‏فَفِي رِوَايَتِهِ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُهِلُّ ‏ ‏بِالْحَجِّ وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا فَصَلَّى الصُّبْحَ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏خَلَا ‏ ‏الْجَهْضَمِيَّ ‏ ‏فَإِنَّهُ لَمْ يَقُلْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறி, துல்ஹஜ் மாதம்
நான்காவது நாள் (காலை மக்காவிற்கு) வந்து, சுப்ஹுத் தொழுகை
தொழுவித்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும், “தமது இஹ்ராமை
உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர் அதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும்”
என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ரவ்ஹு பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின்
அறிவிப்புகளில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகத் தல்பியாக்
கூறினார்கள்” என்று நஸ்ரு பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில்
இடம்பெற்றதைப் போன்றே உள்ளது.

அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காகத் தல்பியாக் கூறினோம்”
என்று காணப்படுகிறது.

நஸ்ரு பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும்
“அல்பத்ஹா எனுமிடத்தில் ஸுப்ஹுத் தொழுதார்கள்” எனும் குறிப்பு கூடுதலாக
இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2178

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ : ‏

‏كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الْأَرْضِ وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا‏ ‏بَرَأَ ‏ ‏الدَّبَرْ وَعَفَا ‏ ‏الْأَثَرْ ‏ ‏وَانْسَلَخَ ‏ ‏صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ ‏ ‏اعْتَمَرْ فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً ‏ ‏فَتَعَاظَمَ ‏ ‏ذَلِكَ عِنْدَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ

அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுப் பருவ மாதங்களில் உம்ராச் செய்வது
பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் எனக் கருதியிருந்தனர்.
(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை
விதிக்கப்பட்ட புனித மாதங்களாக வழக்கில் இருந்ததால்) முஹர்ரம்
மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ்
பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து,
காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ராவை நாடியவர், உம்ராச் செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர்.

நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள்
காலை, ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது
இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது.

இதனால், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்), “எல்லாமும் அனுமதிக்கப்படும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 30, ஹதீஸ் எண்: 2177

‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُسْلِمٌ الْقُرِّيُّ ‏ ‏سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُ : ‏

‏أَهَلَّ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعُمْرَةٍ ‏ ‏وَأَهَلَّ ‏ ‏أَصْحَابُهُ بِحَجٍّ فَلَمْ يَحِلَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَا مَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مِنْ أَصْحَابِهِ وَحَلَّ بَقِيَّتُهُمْ فَكَانَ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏فِيمَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ‏ ‏فَلَمْ يَحِلَّ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ‏ ‏وَكَانَ مِمَّنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَرَجُلٌ آخَرُ فَأَحَلَّا

நபி (ஸல்) உம்ராவிற்காகத் தல்பியாச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள்
ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள். நபி (ஸல்) இஹ்ராமிலிருந்து
விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப் பிராணியைக்
கொண்டு வந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள்
இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களுள்
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால்
அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம்மிடம் பலிப் பிராணி
இல்லாதவர்களுள் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும்
மற்றொருவரும் இருந்தனர். எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து
விடுபட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 30, ஹதீஸ் எண்: 2176

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ الْقُرِّيِّ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْتُ ‏
‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُتْعَةِ الْحَجِّ ‏ ‏فَرَخَّصَ فِيهَا وَكَانَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَنْهَى عَنْهَا ‏
‏فَقَالَ ‏ ‏هَذِهِ ‏ ‏أُمُّ ابْنِ الزُّبَيْرِ ‏ ‏تُحَدِّثُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِيهَا فَادْخُلُوا عَلَيْهَا فَاسْأَلُوهَا قَالَ فَدَخَلْنَا عَلَيْهَا فَإِذَا امْرَأَةٌ
ضَخْمَةٌ عَمْيَاءُ فَقَالَتْ قَدْ رَخَّصَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِيهَا ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ
جَعْفَرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فَأَمَّا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏فَفِي حَدِيثِهِ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏
‏مُتْعَةُ الْحَجِّ ‏ ‏وَأَمَّا ‏ ‏ابْنُ جَعْفَرٍ ‏ ‏فَقَالَ قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِمٌ ‏ ‏لَا أَدْرِي ‏ ‏مُتْعَةُ الْحَجِّ ‏ ‏أَوْ ‏ ‏مُتْعَةُ
النِّسَاءِ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், தமத்துஉ ஹஜ் (செய்வது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். இப்னுஸ் ஸுபைர் (ரலி) அதற்குத் தடை விதிப்பவர்களாக இருந்தார்கள். எனவே, இப்னு அப்பாஸ் (ரலி),
“இதோ இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் (அஸ்மா ரலி)), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமத்துஉ செய்யத் தம்மை அனுமதித்தார்கள்’ எனக் கூறுகின்றார். ஆகவே, அவரிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்” என்றார்கள்.

அவ்வாறே அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் கனத்த உடலுடைய, கண் பார்வையற்ற பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமத்துஉ செய்வதற்கு அனுமதியளித்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்)


குறிப்பு :

இபுனு பஷ்ஷார் (ரஹ்) வழி அறிவிப்பில், தமத்துஉ எனும் சொல்தான் காணப்படுகிறது. ‘தமத்துஉ முறை ஹஜ்’ என இடம் பெறவில்லை. முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இப்னு அப்பாஸ் (ரலி) ‘முத்அத்துல் ஹஜ்’ பற்றிக் கூறினார்களா? அல்லது ‘முத்அத்துந் நிஸா’ (இடைக்காலத் திருமணம்) பற்றிக் கூறினார்களா? என எனக்குத் தெரியவில்லை” என்று முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2175

‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏حَدَّثَهُ :‏

‏أَنَّهُ كَانَ ‏ ‏يَسْمَعُ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏كُلَّمَا مَرَّتْ ‏ ‏بِالْحَجُونِ ‏ ‏تَقُولُ صَلَّى اللَّهُ عَلَى رَسُولِهِ وَسَلَّمَ لَقَدْ نَزَلْنَا مَعَهُ هَاهُنَا وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافُ الْحَقَائِبِ قَلِيلٌ ‏ ‏ظَهْرُنَا ‏ ‏قَلِيلَةٌ ‏ ‏أَزْوَادُنَا ‏ ‏فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَالزُّبَيْرُ ‏ ‏وَفُلَانٌ وَفُلَانٌ فَلَمَّا مَسَحْنَا ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَحْلَلْنَا ثُمَّ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏مِنْ الْعَشِيِّ بِالْحَجِّ ‏


‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏فِي رِوَايَتِهِ أَنَّ مَوْلَى ‏ ‏أَسْمَاءَ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏عَبْدَ اللَّهِ

அஸ்மா (ரலி) (மக்காவிலுள்ள) ‘அல்ஹஜூன்’ எனும் மலையைக் கடந்து செல்லும் போதெல்லாம், “அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அவர்களுடன் இங்கு வந்துத் தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் சொற்பமாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன.

அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி (’ஸயீ’யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆனோம்“ என்று கூறுவதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி) வழியாக அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைஸான் (ரஹ்)


குறிப்பு :

ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், அப்துல்லாஹ் எனும் பெயர் இடம்பெறாமல், “அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது” என்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2174

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَتْ : ‏

‏خَرَجْنَا مُحْرِمِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيَقُمْ عَلَى إِحْرَامِهِ وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلْيَحْلِلْ فَلَمْ يَكُنْ مَعِي ‏ ‏هَدْيٌ ‏ ‏فَحَلَلْتُ وَكَانَ مَعَ ‏ ‏الزُّبَيْرِ ‏ ‏هَدْيٌ ‏ ‏فَلَمْ يَحْلِلْ قَالَتْ فَلَبِسْتُ ثِيَابِي ثُمَّ خَرَجْتُ فَجَلَسْتُ إِلَى ‏ ‏الزُّبَيْرِ ‏ ‏فَقَالَ قُومِي عَنِّي فَقُلْتُ ‏ ‏أَتَخْشَى أَنْ ‏ ‏أَثِبَ عَلَيْكَ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هِشَامٍ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَتْ ‏ ‏قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ ‏ ‏اسْتَرْخِي ‏ ‏عَنِّي ‏ ‏اسْتَرْخِي ‏ ‏عَنِّي فَقُلْتُ ‏ ‏أَتَخْشَى أَنْ ‏ ‏أَثِبَ عَلَيْكَ

நாங்கள் இஹ்ராம் பூண்டவர்களாக(ஹஜ்ஜுக்கு)ப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் தமது இஹ்ராமிலேயே நீடிக்கட்டும்; பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்” என்று சொன்னார்கள்.

அப்போது என்னுடன் பலிப் பிராணி இல்லாததால் நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டேன். (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுடன் பலிப் பிராணி இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அப்போது நான் எனது ஆடையை அணிந்து புறப்பட்டேன்; ஸுபைர் (ரலி) அருகில் சென்றமர்ந்தேன். உடனே அவர்கள், “என்னை விட்டு எழுந்து (சென்று) விடு” என்றார்கள். அதற்கு நான், “உங்களை வீழ்த்தி விடுவேன் என அஞ்சுகின்றீர்களா?” என்று (கேலியாகக்) கேட்டேன்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த்தி அபீபக்ரு (ரலி)


குறிப்பு :

வுஹைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம் …” என்று தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், (“என்னிடமிருந்து எழுந்துவிடு” என்பதற்குப் பதிலாக) “என்னைவிட்டு விலகிச் சென்றுவிடு” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள். அதற்கு நான், “உங்களை வீழ்த்தி விடுவேன் என அஞ்சுகின்றீர்களா? என்று (கேலியாகக்) கேட்டேன்” என்பதாக இடம் பெற்றுள்ளது.