அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2173

‏حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ ‏ ‏الْعِرَاقِ ‏ ‏قَالَ لَهُ سَلْ لِي ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏عَنْ رَجُلٍ يُهِلُّ بِالْحَجِّ فَإِذَا طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏أَيَحِلُّ أَمْ لَا فَإِنْ قَالَ لَكَ لَا يَحِلُّ فَقُلْ لَهُ إِنَّ رَجُلًا يَقُولُ ذَلِكَ ‏
‏قَالَ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏لَا يَحِلُّ مَنْ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ إِلَّا بِالْحَجِّ قُلْتُ فَإِنَّ رَجُلًا كَانَ يَقُولُ ذَلِكَ قَالَ بِئْسَ مَا قَالَ فَتَصَدَّانِي الرَّجُلُ فَسَأَلَنِي فَحَدَّثْتُهُ فَقَالَ فَقُلْ لَهُ فَإِنَّ رَجُلًا كَانَ يُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ فَعَلَ ذَلِكَ وَمَا شَأْنُ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏وَالزُّبَيْرِ ‏ ‏قَدْ فَعَلَا ذَلِكَ قَالَ فَجِئْتُهُ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ لَا أَدْرِي قَالَ فَمَا بَالُهُ لَا يَأْتِينِي بِنَفْسِهِ يَسْأَلُنِي أَظُنُّهُ عِرَاقِيًّا قُلْتُ لَا أَدْرِي قَالَ فَإِنَّهُ قَدْ كَذَبَ قَدْ حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَنَّهُ تَوَضَّأَ ثُمَّ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏
‏ثُمَّ حَجَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ‏ ‏ثُمَّ ‏ ‏عُمَرُ ‏ ‏مِثْلُ ذَلِكَ ثُمَّ حَجَّ ‏ ‏عُثْمَانُ ‏ ‏فَرَأَيْتُهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي ‏ ‏الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ‏ ‏فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ رَأَيْتُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالْأَنْصَارَ ‏ ‏يَفْعَلُونَ ذَلِكَ ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ آخِرُ مَنْ رَأَيْتُ فَعَلَ ذَلِكَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏ثُمَّ لَمْ يَنْقُضْهَا بِعُمْرَةٍ وَهَذَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏عِنْدَهُمْ أَفَلَا يَسْأَلُونَهُ وَلَا أَحَدٌ مِمَّنْ مَضَى مَا كَانُوا يَبْدَءُونَ بِشَيْءٍ حِينَ يَضَعُونَ أَقْدَامَهُمْ أَوَّلَ مِنْ الطَّوَافِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَا يَحِلُّونَ وَقَدْ رَأَيْتُ ‏ ‏أُمِّي ‏ ‏وَخَالَتِي حِينَ تَقْدَمَانِ لَا تَبْدَأَانِ بِشَيْءٍ أَوَّلَ مِنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏تَطُوفَانِ بِهِ ثُمَّ لَا تَحِلَّانِ وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَقْبَلَتْ هِيَ ‏ ‏وَأُخْتُهَا ‏ ‏وَالزُّبَيْرُ ‏ ‏وَفُلَانٌ وَفُلَانٌ بِعُمْرَةٍ قَطُّ فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا وَقَدْ كَذَبَ فِيمَا ذَكَرَ مِنْ ذَلِكَ

இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம் வந்து, “நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘ஒருவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு, (மக்காவிற்கு வந்ததும்) கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்த பிறகு அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாமா, கூடாதா?’ என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) ‘இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடது’ என்று பதிலளித்தால், ‘விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?’ என்று (மீண்டும்) கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது, “ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது” என்று விடையளித்தார்கள். நான் “அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்), “அவர் சொன்னது தவறு” என்றார்கள்.

பின்னர் அந்த இராக்வாசி என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் என்னிடம், “அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்துள்ளதாக அந்த ஒருவர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?’ என்று உர்வா (ரஹ்) அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்), “யார் அவர்?” என்று கேட்டார்கள். நான், “எனக்குத் தெரியாது” என்றேன். அதற்கு உர்வா (ரஹ்), “என்னிடம் நேரடியாக வந்து கேட்பதில் அவருக்கு என்ன பிரச்சினை? அவர் இராக்வாசியாக இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். நான், “எனக்குத் தெரியாது” என்று (மீண்டும்) சொன்னேன்.

உர்வா (ரஹ்), “அவர் பொய்யுரைத்து விட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக உளூச் செய்தார்கள். பிறகு கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.

அபூபக்ரு (ரலி) ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை. உமர் (ரலி) ஹஜ்ஜுக்கு வந்தபோதும், அ(பூபக்ரு (ரலி) செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக கஅபாவைச் சுற்றி வந்ததையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.

முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத்தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.

அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா -ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா -ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.

என் தாயார் (அஸ்மா -ரலி) என்னிடம், “நானும் என் சகோதரி (ஆயிஷா -ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்னவரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் ஸயீயும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்” என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்வாசியான) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்” என்று உர்வா (ரஹ்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி), உர்வா (ரஹ்) வழியாக முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2172

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْنَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏عَنْ رَجُلٍ قَدِمَ بِعُمْرَةٍ فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَلَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏أَيَأْتِي امْرَأَتَهُ ‏ ‏فَقَالَ ‏
‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏سَبْعًا وَصَلَّى خَلْفَ ‏ ‏الْمَقَامِ ‏ ‏رَكْعَتَيْنِ وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعًا وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் உம்ராவிற்காக வந்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ செய்யவில்லை. இந்நிலையில், அவர் (இஹ்ராமிலிருந்து நீங்கி) தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு) வந்தபோது கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று இப்னு உமர் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2171

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ ‏ ‏عَنْ ‏ ‏وَبَرَةَ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلَ رَجُلٌ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏أَطُوفُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَقَدْ أَحْرَمْتُ بِالْحَجِّ فَقَالَ وَمَا يَمْنَعُكَ قَالَ إِنِّي رَأَيْتُ ابْنَ فُلَانٍ يَكْرَهُهُ وَأَنْتَ أَحَبُّ إِلَيْنَا مِنْهُ رَأَيْنَاهُ قَدْ فَتَنَتْهُ الدُّنْيَا فَقَالَ وَأَيُّنَا ‏ ‏أَوْ أَيُّكُمْ لَمْ تَفْتِنْهُ الدُّنْيَا ‏ ‏ثُمَّ ‏
‏قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْرَمَ بِالْحَجِّ وَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَسَعَى بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏
‏فَسُنَّةُ اللَّهِ وَسُنَّةُ رَسُولِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَقُّ أَنْ تَتَّبِعَ مِنْ سُنَّةِ فُلَانٍ إِنْ كُنْتَ صَادِقًا

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர், “நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவுடன், கஅபாவைச் சுற்றி வரலாமா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி), “உமக்கு அதிலென்ன ஐயம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இன்னாரின் மகன் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதாக நினைக்கிறேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர். அவர் உலகக் குழப்பத்தின் சோதனையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்” என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “நம்மில் / உங்களில் யாரைத்தான் இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?” என்று கூறிவிட்டுப் பின்னர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவுடன் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம்.

நீர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில்) உண்மையாளராய் இருந்தால், எவருடைய வழிமுறையையும்விட அல்லாஹ்வின் நெறியும் அவனுடைய தூதரின் வழிமுறையும்தாம் பின்பற்றுவதற்கு மிகவும் தகுதியானவையாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2170

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْثَرٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَبَرَةَ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ جَالِسًا عِنْدَ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ أَيَصْلُحُ لِي أَنْ أَطُوفَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ آتِيَ الْمَوْقِفَ فَقَالَ نَعَمْ فَقَالَ فَإِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ لَا تَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى تَأْتِيَ الْمَوْقِفَ ‏
‏فَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَدْ ‏ ‏حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ يَأْتِيَ الْمَوْقِفَ ‏
‏فَبِقَوْلِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَقُّ أَنْ تَأْخُذَ أَوْ بِقَوْلِ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏إِنْ كُنْتَ صَادِقًا

நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரிதானா?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “ஆம் (சரிதான்)” என்றார்கள். அதற்கு அவர், “நீ அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே! என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியிருக்கின்றாரே?” என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2169

‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبُ بْنُ الشَّهِيدِ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّهُ رَأَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَهُمَا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ ‏
‏قَالَ فَسَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَرَجَعْتُ إِلَى ‏ ‏أَنَسٍ ‏ ‏فَأَخْبَرْتُهُ مَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَالَ كَأَنَّمَا كُنَّا صِبْيَانًا

“நபி (ஸல்) ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்” என்றார்கள்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) “நான் (ஒன்றுமறியாத) நம் சிறுவர்களைப் போல் இருந்தேனோ?” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2168

‏و حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي بِالْحَجِّ وَالْعُمْرَةِ جَمِيعًا ‏
‏قَالَ ‏ ‏بَكْرٌ ‏ ‏فَحَدَّثْتُ بِذَلِكَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏أَنَسًا ‏ ‏فَحَدَّثْتُهُ بِقَوْلِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏مَا تَعُدُّونَنَا إِلَّا صِبْيَانًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا

“நபி (ஸல்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றேன்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். நான் அதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டுமே தல்பியாச் சொன்னார்கள்” என்றார்கள்.

பின்னர் நான் அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இப்னு உமர் (ரலி) கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி), “என்னை நீங்கள் (ஒன்றுமறியா) நம் சிறுவர்களைப் போல் எண்ணிக் கொண்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்’ (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2167

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلَالِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ عَبَّادٍ الْمُهَلَّبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏
‏أَهْلَلْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏مُفْرَدًا ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏مُفْرَدًا

நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு மட்டும் தல்பியாச் சொன்னோம்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டும் தல்பியாச் சொன்னார்கள்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2166

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏
‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏أَرَادَ الْحَجَّ عَامَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏بِابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ فَقَالَ ‏ ” ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “‏ ‏أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلَّا وَاحِدٌ اشْهَدُوا قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏حَجًّا مَعَ عُمْرَتِي ‏ ‏وَأَهْدَى ‏ ‏هَدْيًا ‏ ‏اشْتَرَاهُ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏ثُمَّ انْطَلَقَ ‏ ‏يُهِلُّ ‏ ‏بِهِمَا جَمِيعًا حَتَّى قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبِالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ وَلَمْ يَنْحَرْ وَلَمْ يَحْلِقْ وَلَمْ ‏ ‏يُقَصِّرْ ‏ ‏وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى كَانَ ‏ ‏يَوْمُ النَّحْرِ ‏ ‏فَنَحَرَ وَحَلَقَ وَرَأَى أَنْ قَدْ ‏ ‏قَضَى ‏ ‏طَوَافَ الْحَجِّ وَالْعُمْرَةِ بِطَوَافِهِ الْأَوَّلِ وَقَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏بِهَذِهِ الْقِصَّةِ وَلَمْ يَذْكُرْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا فِي أَوَّلِ الْحَدِيثِ حِينَ قِيلَ لَهُ يَصُدُّوكَ عَنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ إِذَنْ أَفْعَلَ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ يَذْكُرْ فِي آخِرِ الْحَدِيثِ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَمَا ذَكَرَهُ ‏ ‏اللَّيْثُ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் முற்றுகை இட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர்களிடம், “மக்களிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று சொல்லப்பட்டது.

அதற்கு இப்னு உமர் (ரலி), “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அவ்வாறு நான் தடுக்கப் பட்டால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராச் செய்ய முடிவு செய்து விட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என்று கூறியபடி புறப்பட்டார்கள்.

‘பைதாஉ’ எனும் இடத்திற்கு வெளியே வந்ததும், “உம்ராவும் ஹஜ்ஜும் (தடுக்கப்படும் விஷயத்தில்) ஒரே மாதிரிதான். நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள். மேலும், ‘குதைத்’ எனுமிடத்தில் பலிப் பிராணியை விலைக்கு வாங்கி, அதைத் தம்முடன் கொண்டு சென்றார்கள். பின்னர் உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்துத் தல்பியாச் சொன்னார்கள்.

மக்காவிற்கு வந்ததும் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி வந்தார்கள். (உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து ஏழு சுற்று கொண்ட ஒரு தவாஃபே செய்தார்கள்.) அதைவிடக் கூடுதலாகச் செய்யவில்லை. (துல்ஹஜ் பத்தாவது நாள்வரை) பலியிடவில்லை; தலையை மழிக்கவுமில்லை; முடியைக் குறைக்கவுமில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடவுமில்லை.

துல்ஹஜ் பத்தாவது நாள் வந்த பிறகே அறுத்துப் பலியிட்டார்கள்; தலையை மழித்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் செய்த தவாஃபே உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் போதும் என்று கருதினார்கள். மேலும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்தார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “… நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்பதற்கு பதிலாக “… உங்களைச் சாட்சியாக்குகின்றேன்” என இடம்பெற்றுள்ளது).

அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்” என்று சொல்லப்பட்டபோது, “அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்று செய்வேன் என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

ஹதீஸின் இறுதியில், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்தார்கள்” என இப்னு உமர் (ரலி) கூறியது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2165

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏
‏كَلَّمَا ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏حِينَ نَزَلَ ‏ ‏الْحَجَّاجُ ‏ ‏لِقِتَالِ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَا لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ فَإِنَّا ‏ ‏نَخْشَى أَنْ يَكُونَ بَيْنَ النَّاسِ قِتَالٌ يُحَالُ بَيْنَكَ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَالَ ‏ ‏فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ حِينَ حَالَتْ كُفَّارُ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏بَيْنَهُ وَبَيْنَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏عُمْرَةً فَانْطَلَقَ حَتَّى أَتَى ‏ ‏ذَا الْحُلَيْفَةِ ‏ ‏فَلَبَّى بِالْعُمْرَةِ ثُمَّ قَالَ إِنْ خُلِّيَ سَبِيلِي قَضَيْتُ عُمْرَتِي وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَنَا مَعَهُ ثُمَّ تَلَا ‏ ” ‏لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “‏ ‏ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ بِظَهْرِ ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏قَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْعُمْرَةِ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْحَجِّ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏حَجَّةً مَعَ عُمْرَةٍ فَانْطَلَقَ حَتَّى ‏ ‏ابْتَاعَ ‏ ‏بِقُدَيْدٍ ‏ ‏هَدْيًا ‏ ‏ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ لَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ مِنْهُمَا بِحَجَّةٍ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَرَادَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏الْحَجَّ حِينَ نَزَلَ الْحَجَّاجُ ‏ ‏بِابْنِ الزُّبَيْرِ ‏ ‏وَاقْتَصَّ الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ هَذِهِ الْقِصَّةِ وَقَالَ فِي آخِرِ الْحَدِيثِ وَكَانَ يَقُولُ مَنْ جَمَعَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ كَفَاهُ طَوَافٌ وَاحِدٌ وَلَمْ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் (மக்காவை) முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில், (ஹஜ்ஜுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்களான) அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், “இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மக்களிடையே (உள் நாட்டுப்) போர் மூண்டு இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல முடியாமல் நீங்கள் தடுக்கப்படக் கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினர்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அங்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, அவர்களைக் குறைஷி இறைமறுப்பாளர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தவேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்ததைப் போன்றே நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு புறப்பட்டு ‘துல்ஹுலைஃபா’விற்குச் சென்றதும் உம்ராவிற்காகத் தல்பியாச் சொன்னார்கள். மேலும், “கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் நான் உம்ராச் செய்து முடிப்பேன். அங்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

தொடர்ந்து பயணம் செய்து ‘பைதாஉ’ எனும் இடத்தை அடைந்தபோது, “உம்ராவிற்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவது, ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவதைப் போன்றுதான். (உம்ரா, ஹஜ்) அவ்விரண்டின் நிலையும் ஒன்றே; நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்று ‘குதைத்’ எனுமிடத்தில் ஒரு பலிப் பிராணியை விலைக்கு வாங்கினார்கள்.

பிறகு உம்ரா, ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தடவை (ஏழு முறை) கஅபாவையும், (ஏழு முறை) ஸஃபா-மர்வாவுக்குமிடையேயும் சுற்றி வந்தார்கள். பின்னர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று ஹஜ்ஜை நிறைவு செய்து, உம்ரா, ஹஜ் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகை இட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) ஹஜ் செய்ய விரும்பினார்கள்” என்று இச்செய்தி துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதன் இறுதியில், “உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்பவருக்கு ஒரு தவாஃபே போதும்” என்று இப்னு உமர் (ரலி) கூறுவார்கள் என்றும், “அவ்விரண்டிலிருந்தும் முழுமையாக விடுபடாத வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதில்லை” என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 26, ஹதீஸ் எண்: 2164

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏
‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏خَرَجَ فِي الْفِتْنَةِ مُعْتَمِرًا وَقَالَ ‏ ‏إِنْ صُدِدْتُ عَنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَرَجَ ‏ ‏فَأَهَلَّ ‏ ‏بِعُمْرَةٍ وَسَارَ حَتَّى إِذَا ‏ ‏ظَهَرَ ‏ ‏عَلَى ‏ ‏الْبَيْدَاءِ ‏ ‏الْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ ‏ ‏أَوْجَبْتُ ‏ ‏الْحَجَّ مَعَ الْعُمْرَةِ فَخَرَجَ حَتَّى إِذَا جَاءَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏طَافَ بِهِ سَبْعًا وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعًا لَمْ يَزِدْ عَلَيْهِ وَرَأَى أَنَّهُ مُجْزِئٌ عَنْهُ ‏ ‏وَأَهْدَى

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (மக்காவை ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் முற்றுகை இட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா உடன்படிக்கையின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காகத் தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள்.

‘பைதாஉ’ எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, “உம்ராவும் ஹஜ்ஜும் (தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில்) ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழு முறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா-மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (ஸயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்க வில்லை. அதுவே (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள். மேலும், பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)