அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2641

‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّهُ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّ أُمَّهَا ‏ ‏أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَتْ تَقُولُ ‏ ‏أَبَى سَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ يُدْخِلْنَ عَلَيْهِنَّ أَحَدًا بِتِلْكَ الرَّضَاعَةِ وَقُلْنَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏وَاللَّهِ مَا نَرَى هَذَا إِلَّا رُخْصَةً أَرْخَصَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِسَالِمٍ ‏ ‏خَاصَّةً فَمَا هُوَ بِدَاخِلٍ عَلَيْنَا أَحَدٌ بِهَذِهِ الرَّضَاعَةِ وَلَا رَائِينَا

“நபி (ஸல்) அவர்களுடைய மனைவியருள் எவரும் பால்குடிப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து, (செவிலித் தாய்-மகன்) உறவை ஏற்படுத்தி, அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிப்பதை ஏற்கவில்லை (ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர) ” என்று என் தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஸலமா (ரலி) கூறுவார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை அனுமதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த் திரையின்றி)ப் பார்த்துமில்லை” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்து அபீஸலமா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2640

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِهَارُونَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمَيْدَ بْنَ نَافِعٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏تَقُولُ : ‏ ‏

سَمِعْتُ ‏ ‏أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏وَاللَّهِ مَا تَطِيبُ نَفْسِي أَنْ يَرَانِي الْغُلَامُ قَدْ اسْتَغْنَى عَنْ الرَّضَاعَةِ ‏ ‏فَقَالَتْ لِمَ قَدْ جَاءَتْ ‏ ‏سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَرَى فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏مِنْ دُخُولِ ‏ ‏سَالِمٍ ‏ ‏قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْضِعِيهِ فَقَالَتْ إِنَّهُ ذُو لِحْيَةٍ فَقَالَ ‏ ‏أَرْضِعِيهِ يَذْهَبْ مَا فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏فَقَالَتْ وَاللَّهِ مَا عَرَفْتُهُ فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ

நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட ஒரு சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “எதற்காக (நீங்கள் அவ்வாறு விரும்பவில்லை)?” என்று கேட்டுவிட்டு,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸஹ்லா பின்த்து ஸுஹைல் (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கின்றேன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய்-மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள்.

அதற்கு ஸஹ்லா (ரலி), “அவர் (ஸாலிம்) தாடி வளர்ந்துவிட்ட இளைஞர் ஆயிற்றே?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) (மீண்டும்), “நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்” என்று கூறினார்கள்.

பின்னர் ஸஹ்லா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி (ஸல்) சொன்னதை நான் செய்த) பின்னர் அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை” என்று கூறிய நிகழ்வை எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்து அபீஸலமா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2639

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏قَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏إِنَّهُ يَدْخُلُ عَلَيْكِ الْغُلَامُ الْأَيْفَعُ الَّذِي مَا أُحِبُّ أَنْ يَدْخُلَ عَلَيَّ قَالَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَمَا لَكِ فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسْوَةٌ قَالَتْ إِنَّ امْرَأَةَ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏سَالِمًا ‏ ‏يَدْخُلُ عَلَيَّ وَهُوَ رَجُلٌ وَفِي نَفْسِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏مِنْهُ شَيْءٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْضِعِيهِ حَتَّى يَدْخُلَ عَلَيْكِ

உம்மு ஸலமா (ரலி), “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் ஒரு சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகின்றானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்கு இருக்கின்றதே!” என்று கூறிவிட்டு,

நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுதைஃபாவின் மனைவி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பருவ வயதை அடைந்துவிட்ட ஸாலிம் என் வீட்டிற்குள் வருகின்றார். அதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறினார். அதற்கு, “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய்-மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாம்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்து உம்மி ஸலமா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2638

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏أَنَّ ‏ ‏الْقَاسِمَ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ : ‏

‏أَنَّ ‏ ‏سَهْلَةَ بِنْتَ سُهَيْلِ بْنِ عَمْرٍو ‏ ‏جَاءَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏سَالِمًا ‏ ‏لِسَالِمٍ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏مَعَنَا فِي بَيْتِنَا وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ قَالَ ‏ ‏أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ


قَالَ فَمَكَثْتُ سَنَةً أَوْ قَرِيبًا مِنْهَا لَا أُحَدِّثُ بِهِ وَهِبْتُهُ ثُمَّ لَقِيتُ ‏ ‏الْقَاسِمَ ‏ ‏فَقُلْتُ لَهُ لَقَدْ حَدَّثْتَنِي حَدِيثًا مَا حَدَّثْتُهُ بَعْدُ قَالَ فَمَا هُوَ فَأَخْبَرْتُهُ قَالَ فَحَدِّثْهُ عَنِّي أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْنِيهِ

நபி (ஸல்) அவர்களிடம் ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் பின் அம்ரு (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் (ரலி) எங்களுடன் எங்கள் வீட்டில்தான் வசிக்கின்றார். அவர் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அவர் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகின்றார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு அதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு அபீமுலைக்கா (ரஹ்) கூறுவதாவது:

ஓராண்டு அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை. இதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், “நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை” என்று கூறினேன். காஸிம் (ரஹ்), “அந்த ஹதீஸ் எது?” என்று (என்னிடம்) கேட்க, நான் இந்த ஹதீஸைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “ஆயிஷா (ரலி) என்னிடம் இதை அறிவித்திருக்கின்றார்கள். எனவே, நான் கூறியதாக நீங்கள் இதை (தாராளமாக) அறிவிக்கலாம்” என்று கூறினார்.

அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2637

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الثَّقَفِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

‏أَنَّ ‏ ‏سَالِمًا ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏كَانَ مَعَ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏وَأَهْلِهِ فِي بَيْتِهِمْ فَأَتَتْ تَعْنِي ابْنَةَ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنَّ ‏ ‏سَالِمًا ‏ ‏قَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَقَلَ مَا عَقَلُوا وَإِنَّهُ يَدْخُلُ عَلَيْنَا وَإِنِّي أَظُنُّ أَنَّ فِي نَفْسِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏مِنْ ذَلِكَ شَيْئًا فَقَالَ لَهَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ وَيَذْهَبْ الَّذِي فِي نَفْسِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏فَرَجَعَتْ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُهُ فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ

அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) ஸாலிம் (ரலி), அபூஹுதைஃபாவுடனும் அவருடைய மனைவி ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் (ரலி) உடனும் அவர்களது வீட்டில் வசித்து வந்தார். நபி (ஸல்) அவர்களிடம் ஸஹ்லா (ரலி) வந்து, “ஸாலிம், ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார். மற்றவர்களைப் போலவே அவரும் அறிந்து கொள்கின்றார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகின்றார். இதனால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடும் என்பதால்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறதோ என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) ஸஹ்லாவிடம், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. அதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்” என்று ஆலோசனை கூறினார்கள்.

அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். அதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2636

‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ : ‏

‏جَاءَتْ ‏ ‏سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَى فِي وَجْهِ ‏ ‏أَبِي حُذَيْفَةَ ‏ ‏مِنْ دُخُولِ ‏ ‏سَالِمٍ ‏ ‏وَهُوَ حَلِيفُهُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْضِعِيهِ قَالَتْ وَكَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ ‏ ‏زَادَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فِي حَدِيثِهِ وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي عُمَرَ ‏ ‏فَضَحِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் (ரலி) (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய்-மகன் உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள். ஸஹ்லா (ரலி), “அவர் (ஸாலிம்) பருவ வயதை அடைந்தவராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தவாறு, “அவர் பருவ வயதை அடைந்தவர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

ஸாலிம் (ரலி), அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையும் வளர்ப்பு மகனும் ஆவார். சிறுவயது முதல் அபூஹுதைஃபா (ரலி) வீட்டில்தான் ஸாலிம் (ரலி) வளர்ந்தார். பெற்ற தந்தையான மஅகில் பெயரால் அறியப்படாமல் வளர்ப்புத் தந்தையும் காப்பாளருமான அபூஹுதைஃபா (ரலி) பெயரால், “ஸாலிம் மவ்லா அபீஹுதைஃபா” என்றே அறியப்பட்டார்.

அம்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் (ஸாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்ற கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது.

இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 17, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2635

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ ‏ ‏وَهِيَ تَذْكُرُ الَّذِي يُحَرِّمُ مِنْ الرَّضَاعَةِ قَالَتْ ‏ ‏عَمْرَةُ : ‏

‏فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏نَزَلَ فِي الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ ثُمَّ نَزَلَ أَيْضًا خَمْسٌ مَعْلُومَاتٌ ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏قَالَ أَخْبَرَتْنِي ‏ ‏عَمْرَةُ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏تَقُولُ ‏ ‏بِمِثْلِهِ

எத்தனை முறை பால் குடித்தால் பால்குடி உறவு உண்டாகும்? என்பதைப் பற்றி ஆயிஷா (ரலி) விளக்கும்போது, “ஐயத்திற்கு இடமில்லாத பத்து தடவைகள் (பெண்ணின் மார்பிலிருந்து) பால் அருந்தினால்தான் (பால்குடி உறவு உண்டாகும்) என்ற சட்டம் குர்ஆனில் இடம்பெற்றிருந்தது. பின்னர், ‘ஐயமின்றி ஐந்து தடவைகள்’ என்ற சட்டம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அம்ரா பின்த்தி அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2634

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ : ‏

‏أَنَّهَا قَالَتْ ‏ ‏كَانَ فِيمَا أُنْزِلَ مِنْ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنْ الْقُرْآنِ

“ஐயத்திற்கு இடமில்லாத பத்துத் தடவைகள் (பெண்ணின் மார்பிலிருந்து) பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, ‘ஐயமில்லாத ஐந்து தடவைகள்’ என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பை வலுப்படுத்தக் கூடிய வேறு சான்றுகள் ஏதுமில்லை.

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2633

‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ : ‏

‏سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُحَرِّمُ الْمَصَّةُ فَقَالَ لَا

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஏற்படாது”  என்றார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 5, ஹதீஸ் எண்: 2632

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْفَضْلِ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تُحَرِّمُ ‏ ‏الْإِمْلَاجَةُ ‏ ‏وَالْإِمْلَاجَتَانِ

“ஒரு தடவையோ இரு தடவைகளோ (மார்பிலிருந்து) பாலூட்டுவது, பால்குடி உறவை ஏற்படுத்தாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்முல் ஃபள்லு (ரலி)