அத்தியாயம்: 9, பாடம்: 00, ஹதீஸ் எண்: 1487

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏قَالَ ‏

‏خَرَجَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ وَصَلَّى رَكْعَتَيْنِ

நபி (ஸல்) தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று, கிப்லாவை முன்னோக்கி நின்று மழைவேண்டி(த்தொழுகை நடத்தி)னார்கள்; தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். மேலும், இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி)


குறிப்பு : ‘மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது’: வழக்கமாக மேல்துண்டை அணியும்போது, அதன் நடுப்பகுதி பிடறியில் இருக்கும்; இரு முனைகளும் மார்பில் புரளும். அதை மாற்றிப் போட்டால் நடுப்பகுதி கழுத்தில் இருக்கும்; இரு முனைகளும் முதுகில் புரளும்.

அத்தியாயம்: 9, பாடம்: 00, ஹதீஸ் எண்: 1486

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبَّادَ بْنَ تَمِيمٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الْمَازِنِيَّ ‏ ‏يَقُولُ ‏

‏خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى ‏ ‏وَحَوَّلَ ‏ ‏رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழை வேண்டி(த் தொழுகை நடத்தி)னார்கள். (திடலில்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்றபோது, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி)


குறிப்பு : ‘மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது’: வழக்கமாக மேல்துண்டை அணியும்போது, அதன் நடுப்பகுதி பிடறியில் இருக்கும்; இரு முனைகளும் மார்பில் புரளும். அதை மாற்றிப் போட்டால் நடுப்பகுதி கழுத்தில் இருக்கும்; இரு முனைகளும் முதுகில் புரளும்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1472

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏دَاوُدَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَخْرُجُ يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ فَيَبْدَأُ بِالصَّلَاةِ فَإِذَا صَلَّى صَلَاتَهُ وَسَلَّمَ قَامَ فَأَقْبَلَ عَلَى النَّاسِ وَهُمْ جُلُوسٌ فِي مُصَلَّاهُمْ فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ بِبَعْثٍ ذَكَرَهُ لِلنَّاسِ أَوْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِغَيْرِ ذَلِكَ أَمَرَهُمْ بِهَا وَكَانَ يَقُولُ ‏ ‏تَصَدَّقُوا تَصَدَّقُوا تَصَدَّقُوا وَكَانَ أَكْثَرَ مَنْ يَتَصَدَّقُ النِّسَاءُ ثُمَّ يَنْصَرِفُ ‏

‏فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى كَانَ ‏ ‏مَرْوَانُ بْنُ الْحَكَمِ ‏ ‏فَخَرَجْتُ ‏ ‏مُخَاصِرًا ‏ ‏مَرْوَانَ ‏ ‏حَتَّى أَتَيْنَا الْمُصَلَّى فَإِذَا ‏ ‏كَثِيرُ بْنُ الصَّلْتِ ‏ ‏قَدْ بَنَى مِنْبَرًا مِنْ طِينٍ وَلَبِنٍ فَإِذَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏يُنَازِعُنِي يَدَهُ كَأَنَّهُ يَجُرُّنِي نَحْوَ الْمِنْبَرِ وَأَنَا أَجُرُّهُ نَحْوَ الصَّلَاةِ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ مِنْهُ قُلْتُ أَيْنَ ‏ ‏الِابْتِدَاءُ بِالصَّلَاةِ فَقَالَ لَا يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏قَدْ تُرِكَ مَا تَعْلَمُ قُلْتُ كَلَّا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَأْتُونَ بِخَيْرٍ مِمَّا أَعْلَمُ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ انْصَرَفَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்புப் பெருநாளன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள்; அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள்.

(அன்றைய தினம்) அவர்கள், “தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.

(முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) அதே நிலை தொடர்ந்து நீடித்தது – மர்வான் பின் அல்ஹகம் (மதீனாவின் ஆளுநராக) வரும்வரை. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் கை கோத்தவர்களாக இணைந்து (பெருநாள் ஒன்றில்) தொழும் திடலுக்கு வந்தபோது, அங்குக் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை (புதிதாகக்) காணப்பட்டது. அதை, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் கட்டியிருந்தார்.

அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்.) அவரிடம் இந்த (மாற்றமான) நிலையைக் கண்ட நான், “முதலில் நடைபெறவேண்டிய தொழுகை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு மர்வான், “இல்லை அபூஸயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது” என்று கூறினார். அதற்கு நான், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மறுத்துப் பேசினேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு: “நான் அறிந்திருக்கும் (நபிவழியான) நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது” என்று மூன்று முறை கூறிவிட்டு, அபூஸயீத் (ரலி) திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான இயாள் பின் அப்தில்லாஹ் பின் சஅத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1471

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبَا بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏كَانُوا يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே இரு பெருநாள் தொழுகைகளைத் தொழுபவர்களாய் இருந்தனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1469

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏

‏أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏أَوَّلَ مَا بُويِعَ لَهُ ‏ ‏أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ فَلَا تُؤَذِّنْ لَهَا قَالَ فَلَمْ يُؤَذِّنْ لَهَا ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ قَالَ فَصَلَّى ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏قَبْلَ الْخُطْبَةِ

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) (மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்று) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்” என்ற செய்தியை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், ‘பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது’ எனும் செய்தியையும் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) வழியாக அதாஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1468

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَعَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ ‏ ‏قَالَا ‏

‏لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلَا يَوْمَ الْأَضْحَى ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ حِينٍ عَنْ ذَلِكَ فَأَخْبَرَنِي قَالَ أَخْبَرَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏أَنْ لَا أَذَانَ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ حِينَ يَخْرُجُ الْإِمَامُ وَلَا بَعْدَ مَا يَخْرُجُ وَلَا إِقَامَةَ وَلَا نِدَاءَ وَلَا شَيْءَ لَا نِدَاءَ يَوْمَئِذٍ وَلَا إِقَامَةَ

“நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) தொழுகைக்காக பாங்கு சொல்லப்படவில்லை” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) என்னிடம் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அதாஉ (ரஹ்) அவர்களிடம் அது குறித்து நான் (விபரம்) கேட்டேன். அதற்கு, “நோன்புப் பெருநாள் தொழுகைக்கு இமாம் புறப்பட்டு வரும்போதோ, புறப்பட்டு வந்த பின்போ பாங்கு கிடையாது. அதைப் போன்றே, இகாமத்தோ தொழுகைக்கான அழைப்போ வேறு அறிவிப்புகளோகூட கிடையாது. அன்றைய நாளில் பாங்கோ இகாமத்தோ கிடையாது” என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாக அதாஉ (ரஹ்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : இப்னு அப்பாஸ் (ரலி) & ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1463

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏السَّائِبِ ‏ ‏ابْنِ أُخْتِ ‏ ‏نَمِرٍ ‏ ‏يَسْأَلُهُ عَنْ شَيْءٍ رَآهُ مِنْهُ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فِي الصَّلَاةِ ‏ ‏فَقَالَ ‏ ‏نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي ‏ ‏الْمَقْصُورَةِ ‏ ‏فَلَمَّا سَلَّمَ الْإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَيَّ فَقَالَ لَا تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ ‏

‏فَإِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَنَا بِذَلِكَ ‏ ‏أَنْ لَا ‏ ‏تُوصَلَ ‏ ‏صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَطَاءٍ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏السَّائِبِ بْنِ يَزِيدَ ‏ ‏ابْنِ أُخْتِ ‏ ‏نَمِرٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ غَيْرَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا سَلَّمَ قُمْتُ فِي مَقَامِي وَلَمْ يَذْكُرْ الْإِمَامَ

நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) என்னை ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி, “நீங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் ஜும்ஆத் தொழுதுவிட்டு, அதே இடத்தில் எழுந்து நின்று தொடர்ந்து (ஸுன்னத்) தொழுததைக் கண்ட முஆவியா (ரலி) என்ன கூறினார்கள்?” என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள் என்றேன்.

அதற்கு ஸாயிப் (ரலி), “ஆம்; நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த ஒரு குறுகிய இடத்தில் ஜும்ஆத் தொழுதேன். இமாம் ஸலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா (ரலி) (ஜும்ஆத் தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்.

(நான் சென்றபோது என்னிடம்), “இப்போது செய்ததுபோல் இனிமேல் செய்யாதீர்! ஜும்ஆத் தொழுததும் (யாருடனும்) உரையாடாமலோ, பள்ளிவாசலிலிருந்து வெளியேறிச் செல்லாமலோ (பள்ளிவாசலில் கூடுதல் தொழுகை) தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே நமக்குள் உரையாடாமல் அல்லது (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறிச் செல்லாமல் அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்துத் தொழக் கூடாது” என்று முஆவியா (ரலி) கூறினார்கள் என்று விவரித்தார்கள்.

அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) வழியாக உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்)


குறிப்பு : ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது (ரஹ்) வழி அறிவிப்பில், “இமாம் ஸலாம் கொடுத்தபோது” என்று இல்லாமல், “அவர் ஸலாம் கொடுத்தபோது நான் எழுந்து, அதே இடத்தில் நின்று…” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1462

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ

நபி (ஸல்), ஜும்ஆத் தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1461

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّهُ ‏

‏وَصَفَ تَطَوُّعَ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَانَ لَا ‏ ‏يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّي رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ ‏
‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَظُنُّنِي قَرَأْتُ فَيُصَلِّي أَوْ ‏ ‏أَلْبَتَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுதுவந்த கூடுதலான தொழுகைகள் குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குறிப்பிடும்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜும்ஆத் தொழுதபின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லும்வரை (பள்ளியில்) தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 18, ஹதீஸ் எண்: 1459

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا ‏

‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏مِنْكُمْ

“உங்களில் எவரேனும் ஜும்ஆவுக்குப் பின் (ஸுன்னத்) தொழுவதாயின் நான்கு ரக்அத்கள் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு: ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) வழி அறிவிப்பில் “உங்களில்” எனும் தொடக்கச் சொல் இடம்பெறவில்லை.