அத்தியாயம்: 1, பாடம்: 59, ஹதீஸ் எண்: 183

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏إِذَا هَمَّ عَبْدِي بِسَيِّئَةٍ فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا سَيِّئَةً وَإِذَا هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا عَشْرًا ‏

“என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணமிட்டால் (மட்டும்) அதை நீங்கள் பதிவு செய்துவிட வேண்டாம். அவன் அதைச் செயல்படுத்திவிட்டால் ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அதை அவன் செய்துவிட்டால் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தன் வானவர்களுக்குக்) கட்டளையிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 58, ஹதீஸ் எண்: 182

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏ ‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ ‏ ‏تَجَاوَزَ ‏ ‏لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ بِهِ ‏


و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مِسْعَرٌ ‏ ‏وَهِشَامٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

“என் சமுதாயத்தவரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் செயல்படுத்தாவிட்டால், அல்லது அதை(வெளிப்படுத்தி)ப் பேசாவிட்டால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் (தீய எண்ணங்களைச் சிந்தித்த அவர்களது பாவத்தைத்) தள்ளுபடி செய்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 58, ஹதீஸ் எண்: 181

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وُمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ:‏ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ ‏ ‏تَجَاوَزَ ‏ ‏لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ يَتَكَلَّمُوا أَوْ يَعْمَلُوا بِهِ ‏

“என் சமுதாயத்தவரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (வெளிப்படுத்திப்) பேசாவிட்டால் அல்லது அதைச் செயல்படுத்தாவிட்டால், (தீய எண்ணங்களைச் சிந்தித்த அவர்களது பாவத்தை) அல்லாஹ் தள்ளுபடி செய்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 180

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏آدَمَ بْنِ سُلَيْمَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏خَالِدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ :‏ ‏

لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ [‏وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ ] ‏قَالَ دَخَلَ قُلُوبَهُمْ مِنْهَا شَيْءٌ لَمْ يَدْخُلْ قُلُوبَهُمْ مِنْ شَيْءٍ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَسَلَّمْنَا قَالَ فَأَلْقَى اللَّهُ الْإِيمَانَ فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى [‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ]‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏

“… உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான் …” எனும் (2:284) வசனம் அருளப்பட்டபோது (மக்களது) மனங்களில் அதுவரை குடிபுகாத (சஞ்சலம்) ஒன்று குடிபுகுந்தது. அப்போது, “சொல்லுங்கள்: செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; கட்டுப்படுகின்றோம் என்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குக் கூறினார்கள். (அவ்வாறே மக்கள் கூறவே) அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் நம்பிக்கையை ஊட்டி(வலுப் படுத்தி)னான். கூடவே,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே! (ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” என்ற (2:286) (கற்பிக்கும்) வசனத்தை அருளினான்.

(மக்கள் அதை மீட்டிக் கோரியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்” (என்று மக்கள் வேண்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 179

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ ‏ ‏وَأُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأُمَيَّةَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏:‏

لَمَّا نَزَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [‏لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ] ‏

‏قَالَ فَاشْتَدَّ ذَلِكَ عَلَى ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ بَرَكُوا عَلَى الرُّكَبِ فَقَالُوا أَيْ رَسُولَ اللَّهِ كُلِّفْنَا مِنْ الْأَعْمَالِ مَا نُطِيقُ الصَّلَاةَ وَالصِّيَامَ وَالْجِهَادَ وَالصَّدَقَةَ وَقَدْ أُنْزِلَتْ عَلَيْكَ هَذِهِ الْآيَةُ وَلَا نُطِيقُهَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَتُرِيدُونَ أَنْ تَقُولُوا كَمَا قَالَ أَهْلُ الْكِتَابَيْنِ مِنْ قَبْلِكُمْ سَمِعْنَا وَعَصَيْنَا بَلْ قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ فَلَمَّا اقْتَرَأَهَا الْقَوْمُ ذَلَّتْ بِهَا أَلْسِنَتُهُمْ فَأَنْزَلَ اللَّهُ فِي ‏ ‏إِثْرِهَا [‏آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ] ‏

‏فَلَمَّا فَعَلُوا ذَلِكَ نَسَخَهَا اللَّهُ تَعَالَى فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ [‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا] ‏

‏قَالَ نَعَمْ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ نَعَمْ ‏
‏رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ‏

‏قَالَ نَعَمْ ‏
‏وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ‏

‏قَالَ نَعَمْ ‏

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும் உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான். அவன், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை தண்டிப்பான். அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆதிக்கப் பேராற்றல் உடையவன்” எனும் (2:284) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது, அவர்களின் தோழர்களுக்கு அது கடின தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்கு மீறிய(தாக நாங்கள் நினைத்த) தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம்(ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) உங்களுக்கு இந்த வசனம் அருளப்பட்டுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?” என்று கேட்டார்கள். அதற்கு, “உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்ட இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று, செவியுற்றோம்; மாறு செய்தோம் என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம். (மாறாக,) எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம் என்று கூறுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அவ்வாறே, “எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கிறோம்; உன்னிடமே மீண்டு வருவோம்” என்று மக்கள் கூறத் தொடங்கினர். அவர்கள் சொல்லச் சொல்ல, (மனமொன்றி) அவர்களது நாவுகள் (இறைவனுக்குப்) பணிந்தன.

அதைத் தொடர்ந்து,

“தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை இறைத்தூதரும் ஓரிறை நம்பிக்கையாளர்களும் (உறுதியாக) நம்புகின்றனர். (மட்டுமின்றி,) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய அனைத்து மறைகளையும் தூதர்களையும் நம்புகின்றனர். இறைத்தூதர்களுக்கிடையில் (அவர்களை நம்புவதில்) நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் (உன் கட்டளைகளுக்குச்) செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; உன்னிடமே மன்னிப்பை வேண்டி நிற்கின்றோம்; உன்னிடமே மீண்டு வருவோம் (என்ற நம்பிக்கையில் வாழ்கின்றோம்) என்று அவர்கள் வேண்டுகின்றனர்” என்ற (2:285) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

மக்கள் (தன் கட்டளைகளை ஏற்றுச்) செயல்பட்டதைத் தொடர்ந்து, முந்தைய கடுமைக்கு மாற்றாக,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே! (ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” என்ற (ஆறுதலான, கற்பிக்கும்) (2:286) வசனங்களை அருளினான். (மக்கள் அவ்வாறே அவனிடம் வேண்டவே,)

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது),

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களால் சுமக்க இயலாத எதையும் எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தால் மக்கள் வேண்டியபோது,)

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

இறுதியாக, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். இறைமறுப்பாளக் கூட்டத்தாரை நாங்கள் வென்றெடுக்க எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (என்று மக்கள் வேண்டினர்.)

“ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 56, ஹதீஸ் எண்: 178

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏ ‏

لَمَّا نَزَلَتْ [‏الَّذِينَ آمَنُوا وَلَمْ ‏ ‏يَلْبِسُوا ‏ ‏إِيمَانَهُمْ ‏ ‏بِظُلْمٍ] ‏شَقَّ ذَلِكَ عَلَى ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالُوا أَيُّنَا لَا يَظْلِمُ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ هُوَ كَمَا تَظُنُّونَ إِنَّمَا هُوَ كَمَا قَالَ ‏ ‏لُقْمَانُ ‏ ‏لِابْنِهِ [‏يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ] ‏


حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏حَدَّثَنِيهِ ‏ ‏أَوَّلًا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبَانَ بْنِ تَغْلِبَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏ثُمَّ ‏ ‏سَمِعْتُهُ مِنْهُ

“இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு அபயம் உண்டு …” எனும் (6:82) இறைவசனம் அருளப்பட்டபோது, அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. “நம்மில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?” என்று கேட்டுக் கொண்டார்கள். (இதை அறிந்து கொண்டு) “நீங்கள் நினைப்பது போலன்று; மாறாக, லுக்மான் அவர்கள் தம் மகனிடம், என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே!. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுதான் மாபெரும் அநீதியாகும் என்று சொன்ன (31:13) அநீதியாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கம் அளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 55, ஹதீஸ் எண்: 177

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حَكِيمِ بْنِ حِزَامٍ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَشْيَاءَ كُنْتُ أَفْعَلُهَا فِي الْجَاهِلِيَّةِ ‏ ‏قَالَ ‏ ‏هِشَامٌ ‏ ‏يَعْنِي ‏ ‏أَتَبَرَّرُ ‏ ‏بِهَا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏لَكَ مِنْ الْخَيْرِ قُلْتُ فَوَاللَّهِ لَا أَدَعُ شَيْئًا صَنَعْتُهُ فِي الْجَاهِلِيَّةِ إِلَّا فَعَلْتُ فِي الْإِسْلَامِ مِثْلَهُ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَعْتَقَ فِي الْجَاهِلِيَّةِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَعْتَقَ فِي الْإِسْلَامِ مِائَةَ رَقَبَةٍ وَحَمَلَ عَلَى مِائَةِ بَعِيرٍ ثُمَّ أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ ‏

“அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடி, பல நற்பணிகள் ஆற்றி வந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்கு நற்கூலி உண்டா?)” என்று கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள் (அவற்றுக்கு நற்கூலி உண்டு)” என்று பதிலளித்தார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்து வந்த நற்செயல் எதையும் இஸ்லாத்தி(ல் வந்த பிறகி)லும் செய்யாமல் விடமாட்டேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)


குறிப்பு:

“ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்திருந்தார்கள்; நூறு ஒட்டங்களைத் தர்மம் செய்திருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களைத் தர்மம் செய்தார்கள்” என்று அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 55, ஹதீஸ் எண்: 176

و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَقَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْ رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ ‏ ‏أَتَحَنَّثُ ‏ ‏بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ ‏ ‏عَتَاقَةٍ ‏ ‏أَوْ صِلَةِ رَحِمٍ أَفِيهَا أَجْرٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏مِنْ خَيْرٍ ‏

“அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தர்மம், அடிமை விடுதலை, உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்கூலி உண்டா?, கூறுங்கள்” என்று நான் கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 155, ஹதீஸ் எண்: 175

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَخْبَرَهُ: ‏

أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ ‏ ‏أَتَحَنَّثُ ‏ ‏بِهَا فِي الْجَاهِلِيَّةِ هَلْ لِي فِيهَا مِنْ شَيْءٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏مِنْ خَيْرٍ ‏ ‏وَالتَّحَنُّثُ التَّعَبُّدُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “(இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் நான் செய்து வந்த நல்லறங்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன? அவற்றுக்கு எனக்கு (நற்கூலி) ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 1, பாடம்: 54, ஹதீஸ் எண்: 174

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِإِبْرَاهِيمَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَجَّاجٌ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يَعْلَى بْنُ مُسْلِمٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ : ‏

أَنَّ نَاسًا مِنْ أَهْلِ الشِّرْكِ قَتَلُوا فَأَكْثَرُوا وَزَنَوْا فَأَكْثَرُوا ثُمَّ أَتَوْا ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُو لَحَسَنٌ وَلَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً فَنَزَلَ ‏[‏وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ ‏ ‏أَثَامًا] ‏‏وَنَزَلَ [‏ ‏يَا ‏ ‏عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا ‏ ‏تَقْنَطُوا ‏ ‏مِنْ رَحْمَةِ اللَّهِ] ‏

அதிகமான (அநியாயக்) கொலைகளைச் செய்திருந்த, அதிகமான விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இணைவைப்பவர்களில் சிலர், முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் கூறும் கூற்றும் அழைக்கும் வழியும் அழகானவையே (என்று புரிந்து கொண்டோம்). நாங்கள் (இதுவரை) செய்துவிட்ட (தீய) செயல்களுக்குப் பரிகாரம் கூறுங்கள்” என்று வேண்டிக் கொண்டபோது, “அன்றியும் (ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெந்தக் கடவுளையும் (பிரார்தனைக்கு) அழைக்கமாட்டார்கள்; எந்த மனிதரையும் அநியாயமாகக் கொலை செய்யமாட்டார்கள்; விபச்சாரம் புரியமாட்டார்கள். (இறைவன் விதித்த இந்த வரம்புகளை) மீறிச் செயல்படுபவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்” எனும் (25:68) வசனம் அருளப்பட்டது. மேலும், ” … வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளின்மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள் … ” எனும் (39:53) வசனமும் அருளப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி)