அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 33

حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِىُّ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏وَاقِدِ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ‏ ‏عَصَمُوا ‏ ‏مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மது ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையை(முறையாக)க் கடைப்பிடித்து, ஜகாத்தும் செலுத்தும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால், (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 32

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏وَعَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَا ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَإِذَا قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ثُمَّ قَرَأ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِر

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர் அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். பிறகு, “(நபியே!) நிச்சயமாக நீர் நினைவூட்டுபவர்தாம். அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவரல்லர்” எனும் (அல்குர்ஆன் 088:021-022) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 31

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ :‏

‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيُؤْمِنُوا بِي وَبِمَا جِئْتُ بِهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّه

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள(மார்க்கத்)தையும் நம்புகின்றவரைக்கும் இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இதை அவர்கள் செயல்படுத்தினால் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 30

و حَدَّثَنَا ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَ ‏ ‏أَحْمَدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ‏ ‏عَصَمَ ‏ ‏مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர் அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.08, ஹதீஸ் எண்: 29

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ :‏

‏لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاسْتُخْلِفَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏بَعْدَهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ ‏ ‏الْعَرَبِ ‏ ‏قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَدْ ‏ ‏عَصَمَ ‏ ‏مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي ‏ ‏عِقَالًا ‏ ‏كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ ‏


فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தபின் அபூபக்ரு (ரலி) ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஜகாத் செலுத்த) மறுத்து நின்றனர்.

(அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ரு (ரலி) ஆயத்தமானபோது) உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அபூபக்ரு (ரலி) அவர்களிடம், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உறுதி கூறியவர், அவர்தம் (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாகத் தமது உயிரையும் உடமைகளையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ரு (ரலி), “அல்லாஹ்வின் மீது ஆணை! தொழுகையையும் ஜகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஜகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக!, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஜகாத்தாகச்) செலுத்திய ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் செலுத்த மறுத்தால்கூட, அதை மறுத்தவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

இது குறித்து உமர் பின் அல்-கத்தாப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரு (ரலி) அவர்களின் இதயத்தை, (ஜகாத்தை மறுத்தவர்களுக்கு எதிராகப்) போர் தொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ரு (ரலி) கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு:

முஸ்லிம்கள் தங்கள் அடிப்படைத் தேவைகள் போக மீந்துள்ள சொத்துகளுக்கு 2.5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை ஜகாத் என்னும் வளவரி செலுத்த வேண்டும். இது முஸ்லிமான ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொதுவான கடைமையாகும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிம்கள் தங்கள் ஜகாத்தை அரசிடம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யா எனும் கப்பம் கட்டுதல் கடமையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஓராண்டுக்கான ஜிஸ்யா ஒரு தீனாராகவும் உமையாக்களின் ஆட்சியின்போது நான்கு தீனார்களாகவும் இருந்தது. முஸ்லிமல்லாத சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் ஆண்களில் மூத்த குடிமக்கள் மீதும் ஜிஸ்யா கடமையில்லை. போர் செய்ய வலுவுள்ள முஸ்லிமல்லாத ஆண்கள் மீது மட்டுமே ஜிஸ்யா கடமையாகும்.

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்ற அல்லாஹ்வின் தூதரது கூற்றில் உள்ள “இந்த மக்களுடன்” என்ற குறிப்பாகு சுட்டுப் பெயர், இஸ்லாமிய அரசின்கீழ் மதீனாவில் வாழ்ந்த, ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிப்பாகச் சுட்டுவதாகும்.

மேற்காணும் 29ஆவது ஹதீஸில் ஜகாத்தை மறுத்த முஸ்லிம்கள் ஜிஸ்யாவை மறுத்த முஸ்லிமல்லாதோருடன் ஒப்பு நோக்கப் பட்டிருப்பதும் “இஸ்லாமிய மார்க்கத்தில் (இணைவதில்) வற்புறுத்தல் ஏதுமில்லை … (002:256) என்ற அனைத்தையும் மிகைத்த அல்லாஹ்வின் கூற்றும் இங்குப் பொருந்திப் பார்க்கத் தக்கன.

அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 28

حَدَّثَنَا ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ ‏ ‏أَهْلِ كِتَابٍ ‏ ‏فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا عَرَفُوا اللَّهَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا فَعَلُوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِذَا أَطَاعُوا بِهَا فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ ‏ ‏كَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதல் அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவர்கள் மீது அவர்களது ஒரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களுள் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்களிடமிருந்து ஜகாத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை(ஜகாத்தாக எடுப்பதை)த் தவிர்த்துக் கொள்க!

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.07, ஹதீஸ் எண்: 27

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ جَبَلٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رُبَّمَا قَالَ ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مُعَاذًا ‏ ‏قَالَ :‏

‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ ‏ ‏وَكَرَائِمَ ‏ ‏أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ ‏ ‏مُعَاذًا ‏ ‏إِلَى ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை (யமனுக்கு) அனுப்பி வைத்தபோது சொன்னார்கள்:

“நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சாராரிடம் செல்கின்றீர்கள். அவர்களிடம், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மது ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி எடுக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுங்கள்.

இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளின் இரவிலும் பகலிலும் ஐந்து (வேளைத்) தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள் மீது அல்லாஹ் ஜகாத்(எனும் கட்டாய தானத்)தைக் கடமையாக்கி உள்ளான் என்றும், அது அவர்களுள் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களுள் ஏழைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் கட்டுப்படும்போது அவர்களது சொத்துகளில் அவர்கள் மதிப்பாய் நினைப்பவற்றை (ஜகாத்தாக) எடுப்பதைத் தவிர்த்துக் கொள்க என உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதி இழைக்கப்பட்டவனது பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில் அவனது பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே திரை ஏதுமில்லை”. என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ், இரு அறிவிப்பாளர் வரிசைகளில் அறிவிக்கப் படுகிறது. அவற்றுள் ஒரு தொடரில் இடம்பெறும் அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது ‘நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள்…’ எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) எனக்கு முழுமையாக அறிவித்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 26

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكَّارٍ الْبَصْرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو قَزَعَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏أَخْبَرَهُ ‏ ‏وَحَسَنًا ‏ ‏أَخْبَرَهُمَا ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏أَخْبَرَهُ ‏:‏

‏أَنَّ ‏ ‏وَفْدَ عَبْدِ الْقَيْسِ ‏ ‏لَمَّا أَتَوْا نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنَا اللَّهُ فِدَاءَكَ مَاذَا يَصْلُحُ لَنَا مِنْ الْأَشْرِبَةِ فَقَالَ ‏ ‏لَا تَشْرَبُوا فِي ‏ ‏النَّقِيرِ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنَا اللَّهُ فِدَاءَكَ ‏ ‏أَوَ ‏ ‏تَدْرِي مَا ‏ ‏النَّقِيرُ ‏ ‏قَالَ نَعَمْ ‏ ‏الْجِذْعُ يُنْقَرُ وَسَطُهُ وَلَا فِي ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَلَا فِي ‏ ‏الْحَنْتَمَةِ ‏ ‏وَعَلَيْكُمْ ‏ ‏بِالْمُوكَى ‏

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் நபியே!, அல்லாஹ் எங்களை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். (கூறுங்கள்!) எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத் தகும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்), “(அந்நகீர் எனும்) மரத் தொட்டியிலிருந்து அருந்தாதீர்கள்” என்று கூறினார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! அந்நகீர் என்பது என்னவென்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்), “ஆம், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தின் நடுவே துளையிடப்படுவது தான்” என்று கூறிவிட்டு, “சுரைக் குடுவையிலிருந்தும் மண் குடுவையிலிருந்தும் நீங்கள் அருந்தாதீர்கள்; சுருக்குக் கயிறால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 25

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ ‏ ‏حَدَّثَنَا مَنْ لَقِيَ الْوَفْدَ الَّذِينَ قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَبْدِ الْقَيْسِ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏وَذَكَرَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏فِي حَدِيثِهِ هَذَا ‏:‏

‏أَنَّ أُنَاسًا مِنْ ‏ ‏عَبْدِ الْقَيْسِ ‏ ‏قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ إِنَّا حَيٌّ مِنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏وَبَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ ‏ ‏مُضَرَ ‏ ‏وَلَا نَقْدِرُ عَلَيْكَ إِلَّا فِي ‏ ‏أَشْهُرِ الْحُرُمِ ‏ ‏فَمُرْنَا بِأَمْرٍ نَأْمُرُ بِهِ مَنْ وَرَاءَنَا وَنَدْخُلُ بِهِ الْجَنَّةَ إِذَا نَحْنُ أَخَذْنَا بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ اعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَصُومُوا رَمَضَانَ وَأَعْطُوا الْخُمُسَ مِنْ الْغَنَائِمِ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ عَنْ ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَالْحَنْتَمِ ‏ ‏وَالْمُزَفَّتِ ‏ ‏وَالنَّقِيرِ ‏ ‏قَالُوا يَا نَبِيَّ اللَّهِ مَا عِلْمُكَ بِالنَّقِيرِ قَالَ بَلَى جِذْعٌ تَنْقُرُونَهُ فَتَقْذِفُونَ فِيهِ مِنْ ‏ ‏الْقُطَيْعَاءِ ‏ ‏قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏أَوْ قَالَ مِنْ التَّمْرِ ثُمَّ تَصُبُّونَ فِيهِ مِنْ الْمَاءِ حَتَّى إِذَا سَكَنَ غَلَيَانُهُ شَرِبْتُمُوهُ حَتَّى إِنَّ أَحَدَكُمْ ‏ ‏أَوْ إِنَّ أَحَدَهُمْ ‏ ‏لَيَضْرِبُ ابْنَ عَمِّهِ بِالسَّيْفِ قَالَ وَفِي الْقَوْمِ ‏ ‏رَجُلٌ ‏ ‏أَصَابَتْهُ جِرَاحَةٌ كَذَلِكَ قَالَ وَكُنْتُ أَخْبَؤُهَا حَيَاءً مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ فَفِيمَ نَشْرَبُ يَا رَسُولَ اللَّهِ قَالَ فِي أَسْقِيَةِ ‏ ‏الْأَدَمِ ‏ ‏الَّتِي ‏ ‏يُلَاثُ ‏ ‏عَلَى أَفْوَاهِهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَرْضَنَا كَثِيرَةُ الْجِرْذَانِ وَلَا تَبْقَى بِهَا أَسْقِيَةُ الْأَدَمِ فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَإِنْ أَكَلَتْهَا الْجِرْذَانُ وَإِنْ أَكَلَتْهَا الْجِرْذَانُ وَإِنْ أَكَلَتْهَا الْجِرْذَانُ قَالَ وَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ ‏ ‏إِنَّ فِيكَ لَخَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ ‏ ‏الْحِلْمُ ‏ ‏وَالْأَنَاةُ ‏


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏غَيْرُ وَاحِدٍ لَقِيَ ذَاكَ الْوَفْدَ وَذَكَرَ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّ ‏ ‏وَفْدَ عَبْدِ الْقَيْسِ ‏ ‏لَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِيهِ ‏ ‏وَتَذِيفُونَ ‏ ‏فِيهِ مِنْ ‏ ‏الْقُطَيْعَاءِ ‏ ‏أَوْ التَّمْرِ وَالْمَاءِ وَلَمْ يَقُلْ قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏أَوْ قَالَ مِنْ التَّمْرِ ‏

அப்துல்கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ‘ரபீஆ’ குலக் குடும்பத்தைச் சேர்ந்தோராவோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் உள்ளனர். இதனால், (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்குக் கட்டளை இடுவதற்கும் நாங்கள் செயல்படுத்திச் சுவனம் செல்வதற்குமான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள்” என்று வேண்டினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான்கு செயல்களை உங்களுக்கு நான் கட்டளை இடுகின்றேன்; நான்கு பொருள்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.

(கட்டளைகளாவன:) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்; தொழுகையைக் கடைப்பிடிங்கள்; ஜகாத் செலுத்துங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை(அரசுப் பொது நிதிக்கு)ச் செலுத்துங்கள்.

(மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; தார் பூசப்பட்ட பாத்திரம்; அந்நகீர் ஆகிய நான்கு பொருட்களை நான் உங்களுக்குத் தடை செய்கின்றேன்” எனக் கூறினார்கள்.

அப்போது மக்கள், “அல்லாஹ்வின் நபியே! அந்நகீர் என்பது என்னவெனத் தாங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம் (அறிவேன்). பேரீச்சமரத்தின் அடிமரத்தைத் துளையிட்டு அதில் சிற்றீச்சம்பழங்களை அல்லது பேரீச்சம்பழங்களை நீங்கள் போட்டு அதில் தண்ணீரை ஊற்றி ஊற வைப்பீர்கள். அதன் கொதிநிலை அடங்கியதும், அதை நீங்கள் அருந்துவீர்கள். (அதன் போதையில்) உங்களில் ஒருவர் அல்லது அவர்களுள் ஒருவர் தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையேகூட வாளால் வெட்டி விடுவார்” என்று கூறினார்கள்.

அந்தத் தூதுக்குழுவினரிடையே இவ்வாறு காயம் ஏற்பட்ட ஒருவர் இருந்தார். அவர், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்கப்பட்டுக் கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்” என்று கூறினார். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப் பாத்திரத்திலிருந்து அருந்துவது?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகள்” என்று கூறினார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ஊரில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்குத் தோல் பைகள் சரிப்பட்டு வரா” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்), “அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!” என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அப்துல் கைஸ் குலத்தாரின் தலைவர் அஷ்ஷஜ் (ரலி) அவர்களிடம், “உங்களிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய அறிவாற்றல், நிதானம் ஆகிய இரு குணங்கள் உள்ளன” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).


குறிப்பு:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த அப்துல்கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த ஹதீஸை) நமக்கு அறிவித்தார்” என இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கத்தாதா (ரஹ்) கூறுகின்றார்.

“அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அறிவித்தார்கள் ஆனால் அதில், மரத் தொட்டி (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில் நபி (ஸல்), பேரீச்சமரத்தின் அடிமரத்தைக் குடைந்து அதனுள் சிற்றீச்சம்பழத்தோடு அல்லது பேரீச்சம்பழத்தோடு தண்ணீரையும் கலந்து விடுவீர்கள் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது” என்று அபூநஸ்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “சிற்றீச்சம்பழங்களை அல்லது பேரீச்சம்பழங்களை” என்ற ஐயப்பாடுடைய சொற்கள் இடம் பெறவில்லை.

“அந்தத் தூதுக்குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு அவ்வாறு அறிவித்தனர்” என்று கத்தாதா (ரஹ்) குறிப்பிடுவதை (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா சுட்டிக் காட்டுகின்றார்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.06, ஹதீஸ் எண்: 24

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ يَدَيْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏وَبَيْنَ النَّاسِ فَأَتَتْهُ امْرَأَةٌ تَسْأَلُهُ عَنْ ‏ ‏نَبِيذِ ‏ ‏الْجَرِّ ‏ ‏فَقَالَ ‏
‏إِنَّ ‏ ‏وَفْدَ عَبْدِ الْقَيْسِ ‏ ‏أَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ الْوَفْدُ ‏ ‏أَوْ مَنْ الْقَوْمُ ‏ ‏قَالُوا ‏ ‏رَبِيعَةُ ‏ ‏قَالَ مَرْحَبًا بِالْقَوْمِ ‏ ‏أَوْ بِالْوَفْدِ ‏ ‏غَيْرَ خَزَايَا وَلَا النَّدَامَى قَالَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا ‏ ‏نَأْتِيكَ مِنْ ‏ ‏شُقَّةٍ ‏ ‏بَعِيدَةٍ وَإِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَيَّ مِنْ كُفَّارِ ‏ ‏مُضَرَ ‏ ‏وَإِنَّا لَا نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلَّا فِي ‏ ‏شَهْرِ الْحَرَامِ ‏ ‏فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا نَدْخُلُ بِهِ الْجَنَّةَ قَالَ ‏ ‏فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ قَالَ أَمَرَهُمْ بِالْإِيمَانِ بِاللَّهِ وَحْدَهُ وَقَالَ هَلْ تَدْرُونَ مَا الْإِيمَانُ بِاللَّهِ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏ ‏وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَأَنْ تُؤَدُّوا خُمُسًا مِنْ الْمَغْنَمِ وَنَهَاهُمْ عَنْ ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَالْحَنْتَمِ ‏ ‏وَالْمُزَفَّتِ ‏
‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَرُبَّمَا قَالَ ‏ ‏النَّقِيرِ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَرُبَّمَا قَالَ ‏ ‏الْمُقَيَّرِ ‏ ‏وَقَالَ احْفَظُوهُ وَأَخْبِرُوا بِهِ مِنْ وَرَائِكُمْ ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ مَنْ وَرَاءَكُمْ وَلَيْسَ فِي رِوَايَتِهِ الْمُقَيَّرِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي جَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَقَالَ أَنْهَاكُمْ عَمَّا يُنْبَذُ فِي ‏ ‏الدُّبَّاءِ ‏ ‏وَالنَّقِيرِ ‏ ‏وَالْحَنْتَمِ ‏ ‏وَالْمُزَفَّتِ ‏ ‏وَزَادَ ‏ ‏ابْنُ مُعَاذٍ ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِلْأَشَجِّ ‏ ‏أَشَجِّ عَبْدِ الْقَيْسِ ‏ ‏إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ ‏ ‏الْحِلْمُ ‏ ‏وَالْأَنَاةُ ‏

“அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இத்தூதுக் குழுவினர் யாவர்?’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘ரபீஆவின் சமுதாயத்தவர்’ எனப் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இழிவும் துயரும் அற்ற சமூகத்தாருக்கு நல்வரவு’ என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். அத்தூதுக் குழுவினர், ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இறைமறுப்பாளர்களான முளர் குலத்துக் கிளையினர் தடையாக உள்ளனர். (இதனால், போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வரமுடியாது. ஆகவே, எங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு எத்தி வைப்பதற்கும் நாங்கள் செயல் படுத்திச் சுவனம் செல்வதற்குமான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள். என்று வேண்டினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு நான்கு செயல்களைக் கட்டளையிட்டார்கள். நான்கு பொருட்களை(ப் பயன்படுத்த வேண்டாமென)த் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, ‘அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது (என விளக்கமளித்துவிட்டு) தொழுகையை(முறையாக)க் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது; அத்துடன் போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை (அரசுப் பொது நிதிக்கு) நீங்கள் செலுத்திடவேண்டும்’ என்று கூறினார்கள்.

(மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாம் எனத் தடை விதித்து, இவற்றை நினைவில் வைத்து, உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கும் அறிவித்துவிடுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

குறிப்பு:

“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அரபுமொழி தெரியாத) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து பழ ஊறல் ஊற்றிவைக்கப் பயன்படுத்தும் மண்பானை குறித்துக் கேட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்” என்று அபூஜம்ரா (ரஹ்) கூறினார்.

“அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் பேரீச்ச (மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரத் தொட்டி (அந்நகீர்) என்றும் வேறு சில நேரங்களில் ‘தார் பூசப்பட்ட பாத்திரம்’ (அல்முகய்யர்) என்றும் குறிப்பிடுவதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகிறார்.

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு (அறிவித்துவிடுங்கள்)” என்பது வரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘தார் பூசப்பட்ட பாத்திரம்’ (அல்முகய்யர்) பற்றி அதில் இடம்பெறவில்லை.

மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்கள் தொடர்களிலும் வந்துள்ளது.

அவற்றில், “(மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) சுரைக் குடுவை; பேரீச்ச (மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரத் தொட்டி; (மது ஊற்றி வைக்கப் பயன்படுத்திய) மண் குடுவை; மற்றும் தார்பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை விதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

முஆத் அலம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல்கைஸ் குலத்தின் (தலைவர்) அஷ்ஷஜ் (எனும் முந்திர் பின் ஆயித் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அஷ்ஷஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்களான அறிவாற்றலும் நிதானமும் உங்களிடம் உள்ளன” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.